விக்கிரகங்களை வைத்து பூஜை செய்த பலனை பெற, இந்த ஒரே ஒரு தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றி வழிபட்டாலே போதும்.

vikragam-at-home
- Advertisement -

நம் அனைவருக்குமே வீட்டில் ஏதாவது ஒரு சாமி சிலையாவது வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு இது பழக்கம் இல்லாமல் இருக்கும். சிலருக்கு இதை செய்ய நேரமில்லாமல் இருக்கும். சிலருக்கு விக்கிரகங்களை வைத்து அதற்கு தினம் தினம் நெய்வேத்தியம் செய்யும் அளவிற்கு வசதி இல்லாமல் இருக்கும். நாம் என்னத்தான் கடவுளின் திரு உருவ படங்களை வீட்டில் வைத்து வணங்கினால் கூட விக்கிரகங்களை வைத்து வணங்கும் போது கடவுளே நம் முன் அமர்ந்து இருப்பது போன்று தோன்றும். நாம் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கான காரணமும் அதுவே. அங்கு சாமி சிலைகளை பார்க்கும் போதே நமக்குள் ஒரு பரவசமும், ஆனந்தமும் வரத்தானே செய்கிறது. அந்த ஆனந்தமும் அனுகிரகமும் நம் வீட்டில் அடைய எல்லோருக்கும் ஆசை இருக்க தான் செய்யும்.

இந்த பலனை அடைய விக்கிரகம் இல்லாமலே உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபடும் போது கிடைக்கும் என்றால் அதை அனைவரும் செய்யலாம் தானே, வாருங்கள் அது என்ன தீபம் என்று தெரிந்து கொள்ளலாம். தெய்வத்தின் அனுகிரகம் பெற நம் ஏற்ற வேண்டிய அந்த தீபம் வேறு எதுவும் இல்லை, அனைவருக்கும் தெரிந்த குத்து விளக்கு தீபம் தான் அது.

- Advertisement -

குத்து விளக்கை மகாலட்சுமியின் அம்சமாக தான் நாம் பாவித்து தீபம் ஏற்றுவோம். ஆனால் அதே குத்து விளக்கு தான் உங்களுக்கு விக்கிரகம் வைத்து வணங்கும் பலனை தர வல்லது. குத்துவிளக்கு என்பது குறைந்தது பதினெட்டு அடி என்பது சாஸ்திர கணக்கு. அதில் குறைந்தது பன்னிரெண்டு அடியாவது இருக்க வேண்டும். அரை அடி, ஒரு அடி இது போன்றவை எல்லாம் துணை விளக்கு தான் குத்து விளக்கு இல்லை.

பனிரெண்டு அடி உள்ள ஒரு குத்து விளக்கை எடுத்து கொண்டு அதில் மஞ்சள், குங்குமம், வைத்து நல்ல வாசனை மலர்களை சூடிய பின் குத்து விளக்கின் தண்டு பகுதியில் ஒரு சிறிய பட்டு துணி எடுத்து கட்டி கொள்ளுங்கள். பட்டு துணி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் ஹேமத்துணி என்று கிடைக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒன்பது துணி கட்டினால் நல்லது உங்கள் வசதிக்கேற்ப ஒன்று, மூன்று, என்ற எண்ணிக்கையில் கூட கட்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

அதன் பிறகு அதில் சுத்தமான நெய்யோ, எண்ணெய்யோ உங்கள் வசதிக்கு ஏற்ப விளக்கில் ஊற்றி, அதில் ஒரே ஒரு சொட்டு தேன் மட்டும் கலந்து விடுங்கள். அதுவும் சுத்தமான தேனாக இருக்க வேண்டும். இதை தினந்தோறும் உங்கள் வீட்டில் ஏற்றி வழிபட்டாலே போதும் அத்தனை தெய்வங்களும் வந்து அமர்ந்து நமக்கும் நம் குடும்பத்திற்கும் அருளை வாரி தரும்.

இதையும் படிக்கலாமே: பாம்பை அடித்தால் சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பது உண்மையா? தீயை அணைப்பவர்களுக்கும் இந்த தோஷம் உண்டாகுமா என்ன? இது தெரிஞ்சா இனி இந்த தவறை செய்ய மாட்டீங்க!

இதை செய்ய நாள் கிழமை எதுவும் பார்க்க வேண்டாம். எந்த நாளில் வேண்டுமானாலும் இந்த குத்து விளக்கு பூஜை தொடங்கலாம். ஆனால் தொடர்ந்து ஏற்ற வேண்டும். அவ்வளவுதான் இந்த விளக்கின் ஒளியில் உங்கள் வாழ்க்கையும் ஒளி மாயமட்டும்.

- Advertisement -