பெண்கள் காலையில் எழுந்து நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால், வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். வறுமை வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே வைக்காது.

door-vasal-lakshmi
- Advertisement -

வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் தங்குவதற்கு, பெண்கள் செய்ய வேண்டிய மிக மிக எளிமையான ஒரு ஆன்மிகம் சார்ந்த குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். வீட்டில் பணக்கஷ்டம், வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை உள்ளது. சண்டை சச்சரவு. குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் என்ன. லட்சுமி கடாட்சம் இல்லாத வீட்டில் தான் இத்தனை பிரச்சனைகளும் வரும். லட்சுமி தேவியை வீட்டிற்குள் வர வைப்பதற்கு சுலபமான ஆன்மீகம் சார்ந்த வழியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான சக்தி வாய்ந்த இந்த எளிமையான வழிபாட்டு முறையோடு சேர்ந்த மந்திரத்தை தவறாமல் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் வீட்டு வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
முதலில் படுக்கையில் இருந்து பெண்கள் காலையில் கண்விழித்தும், தெய்வத்தை வணங்கி விட்டு, உடனடியாக கண்ணாடி முன்பு சென்று அவர்களுடைய தலையை சரி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு பல் தேய்த்து முகம் கை கால் அலம்பி காலை கடன்களை முடித்துவிட்டு, குளிக்கவில்லை என்றாலும் நெத்திக்கு இட்டுக்கொண்டு தான் நிலை வாசல் கதவை திறக்க வேண்டும்.

- Advertisement -

நிலைவாசல் கதவை திறக்கும் போது வாசல் கூட்ட துடைப்பம், குப்பை கூடை, என்று எல்லா பொருட்களையும் கையில் எடுத்துச் செல்லக்கூடாது. இரண்டு கைகளையும் நிலை வாசல் கதவில் வைத்து திறக்கும் போது, கோவிலின் வாசல் கதவை திறப்பதாக நினைத்து திறக்க வேண்டும். ‘வரலட்சுமியே வருக வருக’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி அதன் பின்பு கதவை திறக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டு வாசலில் நிற்கும் மகாலட்சுமி, வரலட்சுமி ஆக உங்கள் வீட்டிற்குள் நுழைந்து விடுவாள்.

தினம் தினம் மகாலட்சுமியை இப்படி வரவேற்கக் கூடிய வீட்டில் வறுமை என்பது நிச்சயம் இருக்காது. தினமும் இந்த விஷயத்தை நீங்கள் பின்பற்றி வரலாம். முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை மட்டும் ஆவது இதை தொடர்ந்து செய்து வர வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு மகாலட்சுமியின் பாதங்களை நிலை வாசலில் வரைவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை வர வைய்க்கும். எக்காரணத்தைக் கொண்டும் முந்தைய நாள் உங்களுடைய வீட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் சரி, அடுத்த நாள் காலை கண்விழிக்கும் போது அந்த பிரச்சனையை நினைத்துக் கொண்டு, வீட்டில் இருக்கும் பெண்கள் கண் விழிக்கவே கூடாது.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர கட்டாயம் வீட்டில் வைக்க வேண்டிய 2 செடிகள். கஷ்டம் வரும்போது இந்த செடிகளே, இறைவனிடம் உங்களுக்காக பிராத்தனை செய்யுன்னா பாருங்களேன்.

முந்தைய நாள் பிரச்சனை முந்தைய நாளுடன் முடிந்து விட்டது. இறந்து போன முந்தைய நாளை நினைத்து, மறுநாள் நாம் கஷ்டப்பட்டால், அன்றைய தினத்தின் சந்தோஷத்தையும் இழக்க நேரிடும். வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த மனநிலையில் கண்விழிக்கிறார்களோ, அவர்களை பார்த்து தான் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அந்த நாளை தொடங்குவார்கள். வீட்டில் இருக்கும் பெண் முகவாட்டத்தோடு மன கஷ்டத்தோடு இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களுடைய வேலையும் சரியாக ஓடாது. வீட்டுப் பெண்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடு புன்னகையோடு இருக்கும்போது, அந்த வீடு கோவிலாக மாறும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -