விளக்கெண்ணெயுடன் இந்த 1 பொருளை சேர்த்து தலையில் தடவினால், முடி கட்டுக்கடங்காமல் காடு போல அழகாக தாறுமாறா வளரும்.

hair4
- Advertisement -

விளக்கெண்ணெய் முடியை வளரச் செய்வதில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆயிரமாயிரமாக காசுகொடுத்து எவ்வளவு ஷாம்பு வாங்கினாலும், எவ்வளவு எண்ணெய் வாங்கி தடவினாலும் இந்த விளக்கெண்ணெக்கு ஈடு ஆகாது. மரச்செக்கு விளக்கெண்ணெயை எப்படி எல்லாம் பயன்படுத்தினால் நம்முடைய தலை முடி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பதை பற்றிய 3 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வழுக்கையில் முடி வளர, அடர்த்தியாக முடி வளர, அதேசமயம் முடி பார்ப்பதற்கு சில்கி ஆக இருக்க விளக்கெண்ணெயை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்.

வழுக்கையில் முடி வளர:
ஒரு சிறிய கிண்ணத்தில் மரச்செக்கு விளக்கெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன் இந்த இரண்டு எண்ணெயையும் நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து அடித்து கலக்கி அதன் பின்பு இந்த எண்ணெயை தினந்தோறும் வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் வழுக்கை இடத்தில் சீக்கிரமே முடி வளரும்.

- Advertisement -

அடர்த்தியாக நெருக்க நெருக்கமாக முடி வளர:
ஒரு சிறிய பவுலில் வேப்ப இலை பொடி – 1 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன், கற்றாழைக்கு உள்ளே இருக்கும் ஜெல் – 2 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி கொண்டால் ஒரு ஹேர் பேக் நமக்கு கிடைக்கும். இந்த ஹேர் பேக்கை மயிர் கால்களில் படும்படி நன்றாக போட்டுவிட்டு 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு முடியை அலசி விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை போட்டு வர முடி தாறுமாறாக வளரத் தொடங்கிவிடும். தலைமுடியில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். (வேப்ப இலைக்கு பதிலாக செம்பருத்தி பூ இலை, மருதாணி இலை, முருங்கை இலையை கூட பயன்படுத்தலாம்.)

முடி ஷைனிங்காக மாற:
ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ந்த ரோஜா இதழ்கள் – 1 டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இன்னொரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றி அந்த சுடு தண்ணீர் மேலே, இந்த கிண்ணத்தை வைத்து சூடு செய்யவேண்டும்.

- Advertisement -

நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த எண்ணெய் லேசாக சூடு ஆன பின்பு, இந்த எண்ணெயை எடுத்து தலையில் மேல் பகுதியில் இருந்து நுணி பகுதி வரை, நன்றாக அப்ளை செய்துவிட்டு 1 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

ஒரு மணி நேரம் கழித்த பின்பு, கொஞ்சம் திக்கான ஒரு காட்டன் துணியை எடுத்து சுடுதண்ணீரில் நனைத்து கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது அந்த ஈரத்துண்டை நன்றாகப் பிழிந்து உங்களுடைய தலையில் கட்டிக் கொள்ளவேண்டும். துண்டில் இருக்கு சூடு ஆறும் வரை துண்டு தலையிலேயே இருக்கட்டும். அதன் பின்பு துண்டை எடுத்துவிட்டு எப்போதும் போல ஷாம்பு போட்டு முடியை அலசி கொள்ளலாம். தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்து வர உங்களுடைய முடி சில்கி ஷைனியா மாறி விடும்.

- Advertisement -