மகாலட்சுமியின் அருளை பெற வில்வ இலை அர்ச்சனை.

vilva ilai
- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும். ஏனென்றால் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய தாயாக மகாலட்சுமி தாயார் விளங்குகிறார். ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு அனைத்து செல்வங்களும் அவர்களுக்கு தேவைப்படுகிறது, அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை வில்வ இலையை வைத்து எப்படி அர்ச்சனை செய்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

மகாலட்சுமி தாயார் என்று சொல்லும் பொழுதே அனைத்து செல்வங்களுக்கும் அதிபதி என்பது நமக்கு தெளிவாகவே தெரியும் எவர் ஒருவருக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறதோ அவர்கள் வாழ்வில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது என்பது அனுபவப்பூர்வமாக அனைவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அவற்றுள் மிகவும் குறிப்பாக அவற்றுள் ஒன்றான வில்வ இலை அர்ச்சனை பற்றி தான் இன்றைக்கு நாம் பார்க்க போகிறோம்

- Advertisement -

மகாலட்சுமி தாயாருக்கு உரிய பொருட்கள் என்று பல பொருட்கள் இருக்கின்றன. மரம், விதைகள், பழங்கள் என்று மகாலட்சுமி தயாருக்கு பிடித்தமான அம்சங்கள் பல இருக்கின்றன. ஆனால் மகாலட்சுமி தாயார் தவம் செய்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்ற இடமாக வில்வ மரம் திகழ்கிறது.

வில்வ மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இருந்துதான் மகாலட்சுமி தாயார் அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்றார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட வில்வ மரத்தில் இருக்கக்கூடிய வில்வ இலைகளை வைத்து தான் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு அர்ச்சனை செய்யப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை எந்த நாள் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். சந்திராஷ்டமம் இல்லாத முகூர்த்த நாளாக பார்த்து ஆரம்பித்தால் போதும். இந்த வழிபாட்டிற்கு வில்வ இலைகள் தேவைப்படும். வில்வ இலை இலை என்று பார்க்கும் பொழுது மூன்று இலைகள் சேர்ந்து இருப்பதுதான் ஒரு வில்வ இலை என்று அர்த்தம். அப்படி பார்த்தால் நமக்கு இரண்டு வில்வ இலைகள் வேண்டும் அந்த இலையை சுத்தம் செய்த பிறகு ஒவ்வொரு இலைக்கு மேலும் கட்டியாக சந்தனத்தை வைத்து அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அழுத்த வேண்டும் வலது கையில் மூன்று இலைகள் அதற்கு மேல் சந்தனம் அதற்கு மேல் மூன்று ரூபாய் நாணயங்கள் .

இடது கையில் மூன்று இலைகள் அதற்கு மேல் சந்தனம் அதற்கு மேல் மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் இப்படி இரண்டு கையிலும் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தாயார் முன்பாக “ஓம் மகாலட்சுமி தாயார் போற்றி” என்ற மந்திரத்தை 16 முறை கூறி மகாலட்சுமி தாயாரிடம் மனதார வேண்டிக்கொண்டு இந்த இலைகளை அப்படியே மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் சமர்ப்பித்து விட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலை எப்பொழுது போல் பூஜை செய்யும் பொழுது இந்த சந்தனங்களை எடுத்து நாம் நெற்றியில் தினமும் வைத்து உபயோகப்படுத்தலாம். இந்த ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்காகவோ அல்லது சேமிப்பிற்காகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை உபயோகப்படுத்திய வில்வ இலையை தொடர்ந்து மூன்று முறை உபயோகப்படுத்தலாம். அதற்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது . தினமும் புது இலைகளை உபயோகப்படுத்துவதிலும் எந்த தவறும் இல்லை. அவ்வாறு புதிதாக இலைகளை உபயோகப்படுத்தும் பொழுது பழைய இலைகளை காழ்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் செய்ய வேண்டிய அங்காள பரமேஸ்வரி வழிபாடு

இவ்வாறு நாம் தினந்தோறும் செய்துவர மகாலட்சுமி தாயாரின் அருள் ஆனது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் செல்வ செழிப்பு ஏற்படுவதற்குரிய நல்ல வாய்ப்பை மகாலட்சுமி தாயார் அருள் புரிவார் என்பது நிதர்சனமான உண்மை.

- Advertisement -