சகல பாவங்களும் தீர இந்த 1 பொருளால் விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் போதுமே! தீராத கஷ்டம் எல்லாம் தீரும்.

arugampul-vinayagar-pray
- Advertisement -

இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் அவன் செய்யும் பாவங்களுக்கு உரிய தண்டனையை இப்போதெல்லாம் முன்பை போல அடுத்த பிறவியில் அனுபவிப்பது கிடையாது. இப்பிறவியிலேயே அவன் அனுபவித்து விட்டு தான் செல்கிறான். இப்படி இருக்கும் நிலையில் நாம் அறியாமல் செய்த சகல பாவங்களும் நம்மை விட்டு நீங்கி, நல்வாழ்வு பெற விநாயகருக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அர்ச்சித்தால் போதும் என்கிறது சாஸ்திரம். அப்படியான ஒரு எளிய பரிகாரம் பற்றிய ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

விநாயகருக்கு உகந்த சில பொருட்கள் உண்டு. ஒவ்வொரு பொருட்களுக்கு பின்னாலும், ஒவ்வொரு புராண கதைகளும் உண்டு. அந்த வகையில் இந்த ஒரு பொருளும் புராணக் கதையுடன் ஆரம்பிக்கிறது. எந்த ஒரு விநாயகர் பூஜையையும் அருகம்புல் இல்லாமல் செய்வது கிடையாது. அருகம்புல் பிரதானமாக வைத்து செய்யப்படும் எந்த ஒரு காரியமும் சிதறாது, வெற்றி பெறும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த அருகம்புல் அர்ச்சனை ஞானம், கல்வி, செல்வம் ஆகிய மூன்றையும் நமக்கு அளிப்பதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. விநாயகருக்கு உகந்த இந்த அருகம்புல், புல் வகைகளின் ராஜா என்று கருதப்படுகிறது. ஒரு சிறு அருகம்புல்லுக்கு இந்திரனுடைய மணி முடி கூட ஈடாகாது என்று புராணக்கதை ஒன்று உண்டு. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த இந்த அருகம்புல்லால் விநாயகருக்கு நீங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தெரிந்தும் தெரியாமல் செய்த முற்பிறவியில் உள்ள பாவங்களும், இப்பிறவியில் இருக்கும் பாவங்களும் கூட நீங்கி, நமக்கு நற்கதி உண்டாகும் என்பது நியதி.

முக்தியை தரவல்ல இந்த அருகம்புல் சகல விதமான தோஷங்களையும் தீர்க்கும். எதிர்க்கும் எவரையும் அனலாய் தகித்து சுட்டு விடக் கூடிய ஆற்றல் அனலாசுரன் என்கிற ஒரு அசுரனுக்கு கிடைத்தது. இந்த அனலாசுரன் பல்வேறு துன்பங்களை தேவர்களுக்கும், மக்களுக்கும் கொடுத்து வந்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தேவர்கள் சிவனிடம் முறையிட, அவர் விநாயகரை வதம் செய்ய அனுப்பி வைத்தார்.

- Advertisement -

கடும் போர் புரிந்தும் அனலாசுரனை வெற்றி கொள்ள முடியாத காரணத்தினால் விநாயகர் அந்த அசுரனை அப்படியே பிடித்து இழுத்து வாய்க்குள் போட்டு முழுங்கி விட்டார். இதனால் வயிற்றிற்குள் சென்று அனலாசுரன் தன் வெப்பத்தை கக்க விநாயகருக்கு அதன் தாக்கம் அதிகரித்தது. இதனால் குடம் குடம் ஆக கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். ஆனால் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை.

அப்போது ஒரு ரிஷி வந்து அருகம்புல்லை கொண்டு விநாயகர் தலையில் வைத்து வயிற்று எரிச்சலை அடக்கி, அசுரனை ஜீரணம் ஆகும்படி செய்து விட்டார். இதனால் விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்தால் சகல நன்மைகளும் அருளுவதாக விநாயகர் வரம் கொடுத்தார்.

இதையும் படிக்கலாமே:
மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும். அந்த சிவபெருமானின் அருளை முழுமையாக பெற்று விடலாம்.

கேது கிரகத்திற்கு அதி தேவதை விநாயகர். இதனால் கேது சாந்தி செய்யும் பொழுது அருகம்புல்லை ஹோமத்தில் போடுவது உண்டு. ராஜாக்களுக்கு பட்டாபிஷேகம் செய்யும் பொழுதும் அருகம்புல்லை போல சிறந்து விளங்குவேன் என்று முடி சூட்டியதாக வடமொழி நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இத்தகு மகிமை நிறைந்த சிறு அருகம்புல்லை விநாயகப் பெருமானுக்கு தினந்தோறும் அர்ச்சனை செய்து வந்தால், எல்லா நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -