இந்த மந்திரம் சொல்லி எந்த ஒரு செயலை தொடங்கினாலும் வெற்றி நமக்கு தான்.. உலகத்தையே நம் வசப்படுத்தி, காரிய வெற்றி அடைய உதவும் சிறப்பான மந்திரம்.

pillayar
- Advertisement -

எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த காரியம் நல்ல விதத்தில் நிறைவடைய வேண்டும், நமக்கு சாதகமாக முடிவு ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் விநாயகப் பெருமானை தான் வணங்குவார்கள் அவரை வணங்கி விட்ட பிறகு தான் காரியத்தை தொடங்குவார்கள். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் வணங்கும் பொழுது எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் காரிய சித்தி ஏற்படும் என்றும் இந்த உலகம் மட்டும் அல்லாமல் மூன்று லோகங்களும் வசப்படும் என்றும் தான் இந்த மந்திரம் குறித்த ஆன்மீகப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விநாயகப் பெருமானை நாம் எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். எப்படி வழிபட்டாலும் அவர் நமக்கு அருள் புரிவார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவருக்கு மிகவும் பிடித்தமான மந்திரத்தை நாம் உரைப்பதால் அவர் மேலும் நம் மீது அதிக அன்பு கொண்டு நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அப்பாவிடம் ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் அவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு அப்பாவிடம் ஐஸ் வைத்து அந்த பொருளை வாங்குவோம் அல்லவா அது மாதிரி தான்.

- Advertisement -

விநாயகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன்களை அவர் நமக்கு அருளுவார். ஒவ்வொரு மந்திரத்திற்கு உரிய அர்த்தத்தையும் புரிந்து கொண்டு அதனால் என்ன பலன் ஏற்படும் என்பதை பற்றிய தெளிவான விளக்கத்தை அறிந்து கொண்டு அந்த மந்திரத்தை நாம் உச்சரித்தால் அதனால் நமக்கு தேவையான பலன் கண்டிப்பாக கிடைக்கும். காய்ச்சல் ஏற்பட்டு இருப்பவர்கள் காய்ச்சலுக்குரிய மாத்திரையை சாப்பிட்டால் தான் அது சரியாகும். அதற்கு பதிலாக வயிற்றுவலி மாத்திரையை சாப்பிட்டால் சரி ஆகாது. அது போல தான் நம்முடைய பிரச்சனை என்ன? அதற்குரிய மந்திரம் என்ன? என்பதை தெரிந்து உச்சரிக்க வேண்டும்.

நாம் ஒரு செயலை செய்வதற்கு முன்பு மஞ்சள் அல்லது சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு குங்குமம் இட்டு அருகம்புல் வைக்க வேண்டும். பிறகு ஒற்றை செம்பருத்தி அல்லது ஏதாவது ஒரு வாசனை நிறைந்த மலரை வைத்து, அவருக்கு ஒரு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த மந்திரத்தை நாம் மூன்று முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் க்ரீம் க்லைம் ஸ்ரீம் கங் கணபதி திரிலோக வஸ மாயை ஸ்வாஹா.

இதையும் படிக்கலாமே: இன்று ஆடி வெள்ளி! நின்ற இடத்திலிருந்தே இந்த மந்திரத்தை ஒரு முறை படிச்சிடுங்க. வராகி அம்மனின் அருளும் ஆசீர்வாதமும் முழுமையாக கிடைக்கும்.

ஒரு செயலை செய்வதற்கு முன்பாக இந்த மந்திரத்தை கூறுவதால் நாம் செய்யக்கூடிய செயல் நமக்கு வெற்றிகரமாக நடைபெறும். அதில் வரக்கூடிய அனைத்து தடைகளையும் நீக்கி நமக்கு வெற்றி வாய்ப்பை விநாயகப் பெருமான் அருளுவார். தினமும் மனதார இந்த மந்திரத்தை கூறி, நாம் தொடங்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவோம்.

- Advertisement -