விநாயகர் பரிகாரம்

vinayagar pariharam in tamil
- Advertisement -

விநாயகர் பரிகாரம்

நமது சாஸ்திரங்களில் எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் கட்டாயம் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. காரிய வெற்றி தெய்வமாக கருதப்படுகின்ற விநாயகர் பெருமானை எல்லோரும் விரும்பி வழிபடுகின்றனர். அந்த வகையில் நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்க செய்ய வேண்டிய விநாயகர் பரிகாரம் (Vinayagar pariharam in Tamil) முறை குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

திருமணம் நடக்க

நீண்ட நெடுங்காலமாக திருமணம் அமையப் பெறாமல் தவிக்கின்ற ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்தரமான மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து, அந்த மஞ்சள் பிள்ளையாரை ஒரு பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து, ஒரு மண்டலம் எனப்படும் 48 தினங்கள் தொடர்ந்து அந்த தட்டுக்குள் இருக்கின்ற பிள்ளையாரை வழிபாடு செய்து வர விநாயகரின் அருளால் மிக விரைவிலேயே திருமண பாக்கியம் கிடைக்க பெறுவார்கள்.

- Advertisement -

நவகிரக தோஷங்கள் தீர

வாழ்வில் பலவிதமான சிக்கல்களை சந்திக்கும் ஒரு நபரின் ஜாதகத்தை பார்க்கும் பொழுது அந்த ஜாதகத்தில் நவகிரகங்களின் மாறுபட்ட நிலையால் அந்த நபர் வாழ்வில் அவதிப்படும் நிலை இருப்பதை காண முடியும். இப்படி ஜாதகத்தில் நவகிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் ஏதேனும் கோயிலில் வெட்டவெளியில் இருக்கின்ற விநாயகர் திருவிக்கிரகத்திற்கு பின்புறமாக தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால், நவகிரகங்களால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கி வாழ்க்கை சிறக்கும்.

வறுமை நீங்க

விநாயகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமான மலராக வெள்ளருக்கம் பூ திகழ்கின்றது. விநாயகர் பெருமானுக்கு வெள்ளெருக்கம் மலர் மாலை சாற்றி, ஒரு மண் அகல்விளக்கில் வெள்ளருக்கஞ் செடி பட்டையில் செய்யப்பட்ட வெள்ளெருக்கு திரி போட்டு விநாயகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர, குடும்பத்தில் இருக்கின்ற தரித்திரம், வறுமை போன்றவை நீங்கி பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

- Advertisement -

குழந்தை பேறு கிடைக்க

திருமணமாகி பல காலமாகியம் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கின்ற தம்பதிகள், வளர்பிறை அல்லது தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று அரிசி நொய்யை கொண்டு வந்து, அதை சாதமாக சமைத்து பிள்ளையார் எறும்புகள் எனப்படுகின்ற கருப்பு எறும்புகளின் புற்றில், அந்த எறும்புகளை உங்களின் குழந்தைகளாக மனதில் பாவித்து, அவற்றிற்கு நீங்கள் வடித்த அரிசினை சாதத்தை உணவாக கொடுப்பதால் விநாயகரின் மனம் குளிர்ந்து விரைவிலேயே உங்களுக்கு குழந்தை வரத்தை அருள்வார்.

கல்வியில் சிறக்க

தங்களுக்கு பிறந்த குழந்தை கல்வியில் சிறக்க வேண்டும் என நினைப்பவர்கள் எந்த ஒரு மாதத்திலாவது வருகின்ற வளர்பிறை சதுர்த்தசி தினத்தன்று, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு உங்கள் குழந்தையுடன் சென்று குழந்தையின் பெயரால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து, 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் பென்சில் நோட்டு புத்தகங்களை தானமாக வழங்குவதால் விநாயகரின் அருளால் உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: மாங்கல்ய தோஷம் பரிகார கோயில்

கேது கிரக தோஷம் தீர

ஜாதகத்தில் கேது கிரகத்தின் பாதகமான நிலையால் கேது தோஷம் ஏற்பட்டு, வாழ்வில் துர்பலன்களை சந்திப்பவர்கள் சனிக்கிழமைகள் தோறும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு அல்லது ஏதேனும் கோயிலில் இருக்கின்ற விநாயகர் சன்னதிக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து, மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து சனிக்கிழமைகளில் விநாயகர் (Vinayagar pariharam in Tamil) வழிபாடு செய்பவர்களுக்கு ஜாதகத்தில் கேது கிரகத்தால் ஏற்படுகின்ற பாதகங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -