நம்பிக்கை தோற்கும் பொழுது தும்பிக்கை நாயகனின் சக்தி வாய்ந்த இந்த 1 மந்திரத்தை மட்டும் உச்சரித்துப் பாருங்கள், உங்களை வெல்ல எவராலும் முடியாது!

sad-fear-vinayagar
- Advertisement -

மனிதனுக்கு நம்பிக்கை தான் பலமாக என்றென்றும் கூடவே கடைசி வரை துணை நிற்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று உணர்ந்தாலே தோல்வி நம்மை அணுகுவது இல்லை. இந்த நம்பிக்கை தோற்கும் பொழுது, தும்பிக்கை நாயகனாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானின் இந்த ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். இனி வெற்றி உங்களுக்குத் தான். அப்படியான மந்திரம் என்ன? அதன் பலன்கள் என்னென்ன? என்பதை இனி தொடர்ந்து இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஏதோ ஒரு விஷயத்தில் மனிதன் நம்பிக்கை வைக்கிறான். அதை ஆரம்பத்தில் சிறு சந்தேகத்துடன் தான் அணுகுகிறான், ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதன் மீதான நம்பிக்கையானது அதிகரித்து விடும். இப்படி அதிகரிக்கும் பொழுது, அந்த நம்பிக்கை திடீரென தோற்க நேர்ந்தால் அவ்வளவுதான், வாழ்க்கையே முடிந்து விட்டது போல ஒரு விரக்தி உண்டாகிவிடும். இந்த விரக்தி வரும் பொழுது தும்பிக்கை நாயகன் உடைய கீழ் வரும் மந்திரத்தை உச்சரித்து வந்தால், சகல துன்பங்களும் மறைந்து, மீண்டும் புது நம்பிக்கை பிறக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படியான சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை அனு தினமும் ஒரு முறையாவது மனதிற்குள்ளேயே உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

விநாயகர் பெருமானுடைய மந்திரம்:
ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா!
உமையவளின் பாலனே விநாயகா!
தேவர் மூவர் போற்றும் வேத நாயகா!
தேவாதி தேவனே விநாயகா!

வல்வினைகள் தீர்க்கும் சக்தி நாயகா!
வேண்டும் வரம் தந்திடும் விநாயகா!
மௌனத்தின் முழுப்பொருளே நாயகா!
முக்கண்ணன் மைந்தனே விநாயகா!

- Advertisement -

பக்தர்களின் உறைவிடமே நாயகா!
சர்வ சக்திகளின் பிறப்பிடம் விநாயகா!
முக்திதனை அளித்திடுவாய் நாயகா!
உனை நித்தம் பணிந்திடுவோம் நாயகா!!

விநாயகப் பெருமானுடைய இந்த மந்திரம் மிகுந்த சக்தி வாய்ந்தது. இதனை அமைதியான ஒரு இடத்தில் தியான நிலையில் அமர்ந்து உச்சரிக்க வேண்டும். மனதிற்குள்ளேயே நீங்கள் தாராளமாக எவ்வளவு முறை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். உச்சரிக்க உச்சரிக்க இழந்த நம்பிக்கை மீண்டும் ஊற்றெடுக்க ஆரம்பிக்கும். அவ்வளவு தான் நம் வாழ்க்கை முடிந்து விட்டது, எல்லாமே ஏமாற்றமாக போய்விட்டது. நாம் இவ்வளவு காலம் நம்பின ஒரு விஷயம் இனி இல்லை என்கிற மன உளைச்சலில் இருந்து உங்களை விடுவித்து, நான் இருக்கிறேன், என்னிடம் வந்து விட்டாய், இனி நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன், நீ கலங்காதே! என்ற ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கக் கூடிய அளவிற்கு அற்புதமான மந்திரம் தான் மேலே கூறியுள்ள இந்த விநாயகருடைய மந்திரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
9 விதமான பலன்கள் ஒரே நேரத்தில் பெற்று வீடு மற்றும் தொழில் செய்யும் இடம் சுபிட்சமாக இருக்க வெண்கடுகை இப்படி பயன்படுத்தினாலே போதும். நமக்கான தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

வாழ்க்கையில் விரக்தி வரும் போதும், தன்னம்பிக்கையை இழக்கும் பொழுதும், நம்பிக்கை தோற்கும் பொழுதும், போதும் இந்த வாழ்க்கை என்கிற மனநிலைக்கு தள்ளப்படும் பொழுதும் ஒரு பத்து நிமிடம் தியான நிலையில் அமர்ந்து உச்சரிக்கலாம். விநாயகரை போற்றி புகழக் கூடிய இம்மந்திரம் நமக்குள் ஒரு நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்குவதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -