விநாயகருக்கு இந்த ஒரு வேர் போட்டு தீபம் ஏற்றி பாருங்கள், நினைத்தது 7 நாட்களில் நடக்கும்!

vinayagar-vettiver
- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், வேண்டுதல்களும் நிச்சயம் இருக்கும். அது அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். ஆனால் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் இல்லாத மனிதனே இருக்க முடியாது. முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்தாலும் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும்! காக்கும் கடவுளாக இருக்கும் இந்த தும்பிக்கை கடவுளை இந்த தீபம் ஏற்றி வழிபட்டு பாருங்கள், நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும். அது என்ன? தீபம் எப்படி ஏற்றி வழிபட வேண்டும்? என்கிற தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

விநாயகருக்கு ஏற்றி வைக்கப்படும் தீபம் ரொம்பவே விசேஷமானது! அதை பய பக்தியுடன், உண்மையான சிரத்தையுடன் நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. தொடர்ந்து ஏழு நாட்கள் விநாயகரை மனதார ஏற்று நீங்கள் நினைத்தது நடக்கும் என்கிற நம்பிக்கையுடன் இதை செய்யும் பொழுது நிச்சயம் உங்கள் பிரார்த்தனைகள் பலிதமாகும்.

- Advertisement -

எந்த கிழமையில் தொடங்குகிறீர்களோ அந்த கிழமை வரை இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். திங்கட் கிழமையில் ஆரம்பித்தால் அடுத்த திங்கட்கிழமை வரை இந்த விளக்கு விநாயகர் முன்பு ஏற்றி வைக்க வேண்டும். இந்த விளக்கு ஏற்றுவதற்கு உங்களுக்கு வெட்டிவேர் தேவைப்படும். வெட்டி வேரில் இருக்கும் ஆன்மிக மணம் கமழும் படியான இந்த வாசம் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றக் கூடிய அற்புதமான சக்தியை ஒளித்து கொண்டுள்ளது. குளிர்ச்சி பொருந்திய இந்த வெட்டிவேர் கொண்டு தான் தீபம் ஏற்ற போகிறோம்.

அதிகாலையில் எழுந்து நீராடி வீடு முழுவதும் சுத்தம் செய்து பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். விநாயகருக்கு உரிய நைவேத்தியம் எளிமையான முறையில் உங்களுக்கு முடிந்ததை நீங்கள் செய்து படைக்கலாம். விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றை கொண்டு விநாயகரை அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் விநாயகருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பயன்படுத்தும் திரியுடன் வெட்டிவேர் ஒன்றை எடுத்து ஒன்றாக நன்கு முறுக்கிக் கொள்ளுங்கள். அதை விளக்கில் போட்டு தீபம் ஏற்றி கீழ்வரும் இந்த மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே,
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா!!!

விநாயகருடைய இந்த மூல மந்திரத்தை உச்சரித்த பிறகு உங்கள் பிரார்த்தனைகளை நீங்கள் இறைவனிடம் வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு கோரிக்கையை மட்டும் வைக்க வேண்டும். உங்களுக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் புலம்பக் கூடாது. எது நிறைவேற வேண்டுமோ, அதை மட்டும் நீங்கள் பிரார்த்தனையாக கொண்டு விநாயகருக்கு அருகம் புல்லை காணிக்கையாக அவருடைய பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அருகம்புல்லுக்கு அதீதமான சக்தி உண்டு. இந்த அருகம்புல்லை விநாயகருடைய பாதத்தில் வைத்து, வெட்டிவேர் தீபத்தை ஏற்றி ஏழு நாட்கள் தொடர்ந்து ஒரு வேளை உபவாசம் இருந்து, நீங்கள் வழிபட்டால் நிச்சயம் உங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

- Advertisement -