விநாயகருக்கு இந்த விளக்கு ஏற்றி வைத்தால் போதும். வீட்டில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் அடித்து பிடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும்.

pillaiyar
- Advertisement -

விநாயகர் வழிபாடு செய்தால், விடாப்பிடியாக நம்மை விரட்டி அடிக்கும் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதிலும் கஷ்டங்கள் தீருவதற்கு விநாயகரை பிரத்தியேகமாக எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நம்முடைய ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வழிபாட்டு முறையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மனப்பூர்வமாக நம்பிக்கையாக இந்த வழிபாட்டை செய்தால், இந்த விளக்கை ஏற்றினால், நீங்கள் என்ன நினைத்து இந்த விளக்கை ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் ஒரு சில நாட்களில் நிச்சயம் நிறைவேறிவிடும். அவ்வளவு சக்தி வாய்ந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் இதோ உங்களுக்காக.

விடாப்படியான கஷ்டத்திலிருந்து விடுபட விநாயகருக்கு எந்த விளக்கு ஏற்ற வேண்டும்?
பெரும்பாலும் நம் எல்லோர் வீட்டின் அருகிலும் விநாயகர் கோவில் அல்லது விநாயகர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவில் இருக்கும். பிள்ளையார் இல்லாத இந்து கோவில், இந்த உலகத்திலேயே கிடையாது என்று சொல்லலாம். அந்த விநாயகர் சன்னிதானத்திற்கு முன்பாக இந்த விளக்கை ஏற்ற வேண்டும். அந்த அளவுக்கு நம்முடைய முன்னோர்கள் விநாயகர் வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கோங்க. அதில் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை ஊற்றி, வெள்ளருக்கன் திரியையும், பஞ்சி திரியையும் ஒன்றாக திரித்து அந்த விளக்கில் போட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையார் குட்டு வைத்து விநாயகரை ஒரே ஒரு முறை வளம் வந்து நமஸ்காரம் செய்து, அந்த விநாயகருக்கு முன்பு அமர்ந்து உங்களுடைய பிரச்சனைகளை சொல்லி அதற்கான விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்று முழு நம்பிக்கையோடு முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த விளக்கை வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று ஏற்றலாம். உங்களால் முடியும் என்றால் தினந்தோறும் காலையில் விநாயகருக்கு இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம். கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்ற முடியும் என்பவர்கள் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்றி வையுங்கள். முடியாது என்பவர்கள் தினமும் காலையில் உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகரின் படத்திற்கு முன்பு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு வேண்டுதல் வைத்தாலும் அதன் மூலம் முழு பலன் கிடைக்கும்.

- Advertisement -

தேங்காய் எண்ணெய் என்பது ஒரு புனிதமான எண்ணெய். இறைவனுக்கு வாழைப்பழம் எப்படி உகந்ததோ, அதேபோல இந்த தேங்காய் எண்ணெயும் உகந்ததுதான். ஏனென்றால் நாம் சாப்பிட்டு போட்ட கொட்டையிலிருந்து மற்ற பழங்கள் எல்லாம் வளரும். ஆனால் வாழைப்பழம் அப்படி கிடையாது. எந்த ஒரு எச்சிலும் படாமல் மரத்திலிருந்து விடப்பட்ட கன்னிலிருந்து தான் இன்னொரு வாழைமரம் வளர்கின்றது. அதேபோலத்தான் தேங்காயும். ஒரு தேங்காயிலிருந்து விடப்பட்ட தென்னங்கன்னு தான் தென்னை மரமாக மாறுகின்றது. ஆகவே தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் ஒரு புனிதமான இறைவனுக்காக சமர்ப்பிக்க கூடிய பொருள்தான்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ மழை பொழிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். இதை செய்பவர்கள் வீட்டை விட்டு மகாலட்சுமி தாயார் செல்லவே மாட்டார்.

இதனால்தான் முழு முதல் கடவுளுக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் சிறப்பு என்று சொல்லி வைத்துள்ளார்கள். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -