விரைவில் திருமணம் ஆக பரிகாரம்

viraivil thirumanam aga enna pariharam in tamil language
- Advertisement -

“இருமனம் கூடும் திருமணம்” என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக இருக்கின்ற நிகழ்வாகும். முற்காலத்தில் எல்லாம் வயதிற்கு வந்த ஆணும் மற்றும் பெண்களுக்கு தக்க வயதில் திருமணம் நடந்து முடிந்து விடும். ஆனால் தற்காலத்தில் கல்வி, வசதி போன்றவை இருந்தாலும் சிலருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெறாமல் போய்விடுகிறது. இப்படி தங்களுக்கு திருமணம் தாமதம் ஆகாமல் விரைவில் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

விரைவில் திருமணம் ஆக பரிகாரம்

விரைவிலேயே திருமணம் ஆக வேண்டும் என விரும்பும் ஆண்களும், பெண்களும் தினமும் அதிகாலை 5 மணிக்கு முன்பாகவே எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் விநாயகர் பெருமானுக்கு விளக்கேற்றி கீழ்க்கண்ட இந்த மந்திரத்தை துதிக்க வேண்டும்.
சாலன்க்ருத் கன்யா மே தேஹி
நமஸ்த்யை கணேஷாய நம

- Advertisement -

மிகவும் அபூர்வமான இந்த விநாயகர் மந்திரத்தை ஒரு நாளைக்கு 1101 தடவை துதித்தால் மட்டுமே எதிர்பார்த்த பலனை பெற முடியும். மேற்சொன்ன எண்ணிக்கையில் தினமும் துதிப்பவர்களுக்கு சில நாட்களிலேயே தங்களுக்கு எதிர்பார்த்த வாழ்க்கை துணை அமையப்பெற்று திருமண வைபவம் நடைபெறும் என தாந்திரீக சாஸ்திர நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு சுபமுகூர்த்த நாளில் குரு ஓரை அல்லது சுக்கிர ஓரை நேரத்தில் ஒரு வாழை பழ மரத்தின் வேர் கிழங்கை தோண்டி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த வேர் கிழங்கை உங்களின் கைகளில் வைத்தவரே உங்களின் குலதெய்வ மந்திரத்தையோ அல்லது இஷ்ட தெய்வ மந்திரத்தையோ 108 முறை அல்லது 1008 முறை துதித்து அந்த வேர் கிழங்கிற்கு சக்தி ஊட்டி, ஒரு புத்தம் புதிய மஞ்சள் நிற துணியில் அந்த கிழங்கை வைத்து முடிச்சு போட்டு கட்டி, உங்கள் வீட்டின் ஏதேனும் ஒரு முறையில் வைத்து விடுங்கள். இந்த தாந்திரீக பரிகாரம் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் இந்த வரன் கிடைத்து திருமண ஆக செய்யும்.

- Advertisement -

தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜை அறையில் ராதா-கிருஷ்ணன் சேர்ந்திருக்கும் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு, காலை உணவு உட்கொள்ள வேண்டும். மேலும் பசுக்களுக்கு பச்சை புல் அல்லது பசலை கீரையை தினந்தோறும் கொடுத்து வருவதாலும் திருமணம் தாமதமாகாமல் உரிய காலத்தில் நல்ல முறையில் நடைபெறும்.

தினந்தோறும் காலை எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்த பிறகு உங்கள் வீட்டின் துளசி மடத்தில் இருக்கின்ற துளசி செடிக்கு ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிதளவு நீர் ஊற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். சக்தி வாய்ந்த இந்த ஆன்மீக பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய வகை வாழ்க்கைத் துணை கிடைக்கப்பெற்று திருமணம் புதிதாக நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: ராகு பரிகாரம்

திருமண வயதில் இருக்கும் ஆணோ பெண்ணோ தங்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெற ஒரு வேதியரை ஆலோசித்து, சுப முகூர்த்த நாளில் தங்கள் சக்திக்கேற்ப வீட்டிலேயே துளசி கல்யாணம் சடங்கு செய்வதாலும் நல்ல திருமண வாழ்க்கை அமையப்பெறுவார்கள்.

- Advertisement -