நினைத்தது நடக்க கேட்டது கிடைக்க விரலி மஞ்சள் பரிகாரம்

virali manjal pariharam
- Advertisement -

முழுமையான வாழ்க்கையை யாரும் அனுபவிப்பது கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பிரச்சினைகள் இருக்கும். ஆசைகள், கனவுகள் என்று பல இருக்கும். இவை அனைத்தையுமே நிறைவேற்றிக் கொள்ள முடியுமா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில் முடியாது என்றுதான் கூற வேண்டும். இருப்பினும் நியாயமான கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் அதை இறைவனிடம் முன்வைத்து வழிபடும் பொழுது இறைவனின் அருளால் நாம் நினைத்தது நமக்கு கிடைக்கும். அந்த வகையில் விரலி மஞ்சள் வைத்து மகாலட்சுமி தாயாரையும், வராகி அம்மனையும் எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக வழிபாட்டு முறைகள் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் ஒரே விதமாக தான் இருக்கும். ஒரு சில மலர்களும் வழிபாட்டு முறைகளும் வேறுபடலாம். மற்றபடி தெய்வங்களின் தன்மைகளும் நாம் வணங்கும் பொழுது நாம் கொண்ட பக்தியும் ஒரே மாதிரி தான் இருக்கும். அந்த வகையில் விரலி மஞ்சளை வைத்து மகாலட்சுமி தாயாரையும் அதேசமயம் வராகி அம்மனையும் இந்த முறையில் வழிபட நாம் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும்.

- Advertisement -

செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையாக பார்த்து இந்த வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டிற்கு மகாலட்சுமி தாயார் படம் அல்லது வராகி அம்மன் படம் வேண்டும். மேலும் முனை உடையாத நல்ல விரலி மஞ்சளாக பார்த்து 48 விரலி மஞ்சள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை ஆரம்பிக்கும் நாள் அன்று விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எந்த தெய்வத்தின் படத்தை வைத்து வழிபட விரும்புகிறீர்களோ அந்த தெய்வத்தின் படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து அவர்களுக்கு மலர்களை சூடிவிட்டு அவர்களுக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளம் அல்லது வெள்ளைத் துணியை மஞ்சளில் நனைத்து மஞ்சள் துணையாக மாற்றியும் விரித்து வைத்துக் கொள்ளலாம்.

தனியாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு கையில் ஒரு விரலி மஞ்சள் வைத்துக்கொண்டு நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார கூறிவிட்டு அம்மனின் பாதத்தில் சமர்ப்பது போல் அந்த தாம்பாளத்தில் வைத்து விட வேண்டும். இதே போல் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மஞ்சள் என்ற வீதம் அம்மனின் பாதத்தில் வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த 48 நாட்களும் அசைவம் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்ல பலனை தரும். இப்படி 48 நாட்களும் விரலி மஞ்சள் வைத்த பிறகு 49வது நாள் வெள்ளை நூலை எடுத்து அதில் மஞ்சள் தடவி மஞ்சள் நூலாக மாற்றிவிட்டு இந்த 48 விரலி மஞ்சள்களையும் எடுத்து மாலையாக கட்ட வேண்டும்.

மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் இந்த விரலி மஞ்சள் வைத்திருந்தோம் என்றால் இந்த மஞ்சள் மாலையை அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் கோவிலுக்கு சென்று அவர்களுக்கு வழங்கி விட வேண்டும். வராகி அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை செய்திருந்தால் வராகி அம்மன் கோவிலுக்கு சென்று அவர்களுக்கு இந்த மாலையை சமர்ப்பித்து விட வேண்டும்.

- Advertisement -

எந்த அளவுக்கு முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த அளவுக்கு நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். 48 நாட்கள் முடிவதற்குள்ளேயே நினைத்தது நடந்து நடந்துவிட்டாலும் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தை கணக்கு சேர்க்க வேண்டாம். அதை விட்டுவிட்டு மீதம் இருக்கும் நாட்களை கணக்கு செய்து 48 நாட்கள் என்று வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எந்தவித தடைகளும் தடங்கல்களும் இல்லாமல் இந்த வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஜன வசியம் பண வசியம் ஏற்பட பரிகாரம்

மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் எளிமையான இந்த வழிபாட்டு முறையை நாமும் முழு நம்பிக்கையுடன் பின்பற்றி நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -