தீராத விரோதத்தோடு பகையோடு பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கும் எதிரியைக் கூட சாந்தப் படுத்தி விடலாம். முருகப் பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்தால்.

murugan-vel
- Advertisement -

எதிரி என்பவர்கள் தானாக எங்கிருந்தோ முளைத்து வருபவர்கள் அல்ல. நம்முடனே இருக்கும் நண்பர்கள், நம் உறவினர்களுக்குள் ஏற்படும் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் தான் பகையை உண்டாக்கி விடுகின்றது. நம்முடைய எதிரி நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைத்து விட்டால் போதும். நமக்கு எதிரி தொல்லையே இருக்காது. எதிரியின் மூலம் எந்த பிரச்சனையும் ஏற்படாது. கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். இருப்பினும் எதிரி நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையில் பாதி முடிந்தது.

enemy1

எதிரிகளை துவம்சம் செய்ய எதிரிகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள காக்கும் கடவுளான சுப்பிரமணிய வழிபாட்டை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய சக்தி கொண்ட வேலினை தன் கையில் ஆயுதமாக வைத்துக் கொண்டிருக்கும் வேலனை தினம் தோறும் வணங்கி வருபவர்களுக்கு எந்த கெடுதலும் நடக்காது.

- Advertisement -

உங்களுக்கு கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் தொல்லை அதிகமாக இருந்தால், எதிரிகளால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் கண் திருஷ்டியின் மூலம் உங்களுடைய முன்னேற்றம் பாதித்தால் தினமும் இந்த வழிபாட்டு முறையை மேற்கொண்டாலே போதும். உங்கள் வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலை வைத்தும் அதற்கு முன்பாக இந்த மந்திரத்தைச் சொல்லலாம்.

enemy

வீட்டில் வேல் வைத்து இல்லாதவர்கள் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டு எதிரி நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, எதிரியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைத்து, நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.

- Advertisement -

‘ஓம் நமோ பகவதே
சரவணபவாய, சண்முகாய, சுப்ரமண்யாய
குஹாய நமஹ!’

murugan-silai-abishegam

தினமும் சொல்ல வேண்டும். மனதில் எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் சொல்ல வேண்டும். எதிரிகளும் நண்பர்கள் தான் என்ற உணர்வை மனதிற்குள் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஒற்றைப்படையில் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். முடிந்தவர்கள் 1008 முறை தினம்தோறும் இந்த மந்திரத்தை தொடர்ந்து, 48 நாட்கள் உச்சரித்தால் கைமேல் பலன் பெற முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -