பிடித்த வேலை உங்களுக்கு கிடைக்க வேலை தேட செல்லும் முன் இதை மட்டும் தவறாமல் பார்த்து விட்டு சொல்லுங்கள். நீங்கள் விரும்பிய வேலை நிச்சயம் உங்கள் கையில் இருக்கும்.

- Advertisement -

வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் விரும்பிய வேலை கிடைப்பதெல்லாம் பெரிய அதிசயம் தான். வேலை எல்லோரும் தான் செய்கிறார்கள் ஆனால் செய்யும் வேலையில் ஒரு திருப்தியும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால் அது நம் மனதுக்கு பிடித்த வேலையை செய்யும் போது தான் கிடைக்கும். அப்படியான ஒரு வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்க இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது.

எல்லோரும் சொல்வார்கள் வேலையை பொறுத்த வரையில் எந்த வேலை என்றாலும் அதை நல்ல முறையில் செய்தால் அதன் பலன் நிச்சயம் உண்டு இதை தவறு என்று சொல்லவில்லை கண்டிப்பாக எந்த ஒரு தொழிலும் நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் செய்தால் நிச்சயம் அதில் கடவுளின் அனுகிரகத்தோடு முன்னுக்கு வருவோம் என்பதில் சந்தேகம் இல்லை தான். ஆனால் அதே வேலையை நமக்கு பிடித்ததாக இருந்தால் அதில் இன்னும் நாம் பல மடங்கு உயர்வோம் என்பதிலும் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு வேலை வாய்ப்பை பெற செய்ய வேண்டியதை தான் இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பிடித்த வேலை கிடைக்க செய்ய வேண்டியது:
இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் சந்தனாதி தைலத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் எளிமையாகவே கிடைக்கும்.

அடுத்ததாக வேலை தேடி புறப்படும் முன்பாக உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் பாதி அளவு இந்த சந்தனாதி தைலத்தை ஊற்றிக் கொள்ளுங்கள். மீதி நல்லெண்ணெய் ஊற்றிய பிறகு பஞ்சு திரி போட்டு தீபத்தை ஏற்றி வைத்து கொள்ளுங்கள். இப்போது ஏற்றிய தீபத்தின் முன்பாக அமர்ந்து நீங்கள் வேலை தேடி போகும் இடம் வேலை சம்பந்தமானவற்றையெல்லாம் உங்கள் மனதிற்குள் நினைத்து இந்த வேலை எனக்கு நிச்சயமாக கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அதன் பிறகு விளக்கை நீங்களே குளிர செய்து விடுங்கள். இந்த சந்தனாதி தைலம் நம் எண்ணத்தை நமக்கு ஈடேறும் அற்புத சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதன் பிறகு வெளியில் செல்லும் போது ஒரே ஒரு ஏலக்காயை மட்டும் போட்டு மென்று தண்ணீர் குடித்து விடுங்கள். ஒரு வேளை உங்களுக்கு இப்படி சாப்பிட பிடிக்க வில்லை என்றால் கொஞ்சம் ஏலக்காய் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு செல்லுங்கள். எந்த ஒரு காரியத்திற்காக நாம் செல்லும் போதும் இப்படி ஏலக்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகும் போது காரிய சித்தியாகும்.

இவையெல்லாம் செய்த பிறகு நீங்கள் செல்லும் வழியில் ஆஞ்சநேயர் ஆலயம் இருந்தால் அங்கு ஒரு தீபம் ஏற்றி வழிபட்ட பின்பு நேராக நீங்கள் பணி நிமித்தமாக செல்லும் இடத்திற்கு செல்லுங்கள். இந்த ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையும் உங்களை சுற்றி எப்போதும் ஒரு நேர்மறை ஆற்றலை உருவாக்கிக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் எப்போதும் சண்டை, தொழிலில் முடக்கம் பண தடை போன்றவைகளால் நீங்கள் பெரிதும் துன்பப்படுகிறீர்களா? அதற்கு காரணம் நீங்கள் அணியும் இந்த ஆடையாக இருக்கலாம்.

இந்த பரிகாரத்தோடு உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்க நீங்கள் எடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்யும் பொழுது நிச்சயமாக அதில் வெற்றி மட்டுமே காண்பீர்கள். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்களுக்கு மன நிறைவான வேலையில் சேரும் வாய்ப்பை பெறலாம்.

- Advertisement -