நல்லது நடக்க முருகர் வழிபாடு

murgar
- Advertisement -

முருகரை எந்த நேரத்தில், எந்த நாளில், எந்த கிழமையில் வழிபாடு செய்தாலும் தவறு கிடையாது. ஆனால் அவருக்கே உரிய நட்சத்திர நாளில் முருகரை வழிபாடு செய்யும்போது நமக்கு கிடைக்கும் கூடிய பலனானது இரட்டிப்பாக இருக்கும். அந்த வகையில் உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் உடனடியாக தீருவதற்கு முருகப்பெருமானை எந்த நாளில் வழிபாடு செய்ய வேண்டும், அவருக்கு உரிய நட்சத்திரம் எது என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முருகர் நட்சத்திர வழிபாடு

நட்சத்திரத்தில் பதினாறாவதாக வரக்கூடிய நட்சத்திரம் தான் விசாக நட்சத்திரம். மாதந்தோறும் வரக்கூடிய இந்த விசாக நட்சத்திரத்தன்று உங்க வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

முருகனுக்கு ஏதாவது ஒரு நெய்வேதியம் வைத்து, பூ பழம் தேங்காய் வாங்கிக் கொண்டு போய் உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, முருகரை வழிபாடு செய்து வேண்டுதல் வைத்தால் நீங்கள் வைத்த வேண்டுதலானது அடுத்த விசாக நட்சத்திரத்திற்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

விசாக நட்சத்திரத்திற்கும் முருகருக்கு அவ்வளவு நெருக்கம். மாதம் தோறும் வர கூடிய விசாக நட்சத்திரத்தன்று முருகரை வழிபாடு செய்ய தவற விடாதீர்கள். காலண்டரில் பார்த்தாலே என்றைக்கு விசாக நட்சத்திரம் வருகிறது என்பது நமக்கு தெரிந்துவிடும்.

- Advertisement -

உங்களுக்கு தெரிந்தவர் யாராவது விசாக நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவரை உங்க கூடவே கூட்டி செல்லுங்கள். ஒரு முருகர் கோவிலுக்கு சென்று அவருடைய கையால் முருகரின் திரு உருவப்படம், முருகர் வேல், அல்லது முருகர் சிலை ஏதாவது ஒன்றை வாங்கி தரச் சொல்லுங்கள். நீங்கள் பணம் கொடுங்கள்.

ஆனால் அந்த முருகர் படத்தை மட்டும் அந்த விசாக நட்சத்திரக்காரர்களின் கையால் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி விசாக நட்சத்திர காரர்கள் கையால் வாங்கிய முருகர் சிலையையோ, வேல் அல்லது முருகர் படத்தையோ உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை எல்லாம் அந்த முருகப்பெருமான் நொடிப்பொழுதில் தீர்த்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

முயற்சி செய்து பாருங்கள். தீராத துன்பம் தீருவதற்கு கடவுள் இப்படித்தான் ஏதாவது ஒரு ரூபத்தில் வழியை காண்பிப்பான். உங்களுடைய கஷ்டம் தீர கடவுள் இந்த பதிவின் மூலம் ஒரு வழியை காட்டி இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டு விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்துதான் பாருங்களேன். உங்கள் வம்சமே சந்தோஷமாக வாழக்கூடிய அளவுக்கு ஆசீர்வாதத்தை முருகப்பெருமானிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: தொழில் விருத்தி ஆக சொல்ல வேண்டிய மந்திரம்

முடிந்தவர்கள் விசாக நட்சத்திரத்தன்று உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யுங்கள். அந்த புண்ணியம் உங்களுடைய அடுத்தடுத்த ஏழேழு ஜென்மத்திற்கும் போய் சேரும் என்ற இந்த அறிய தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -