வாழ்வில் விஸ்வரூப வெற்றி பெற பரிகாரம்

pasu
- Advertisement -

சில பேர் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாளர்களாக வர வேண்டும் என்று அயராது உழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு சாதாரண வெற்றி என்பது கூட கிடைக்காது. எங்கிருந்து விஸ்வரூப வெற்றியை அடைவது. செய்யும் தொழில், வேலை, வியாபாரம், இப்படி, படிப்பு எல்லா விஷயத்திலும் தோல்வியை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்கள், தோல்வியை எல்லாம் கடந்து சென்று, விஸ்வரூப வெற்றியை அடைய வேண்டும் என்றால் என்ன செய்யணும். ஆன்மீகம் சார்ந்த எளிய இரண்டு பரிகாரங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.

விஸ்வரூப வெற்றி அடைய வில்வ இலை பரிகாரம்

முதலில் வாரத்தில் ஒரு நாள் இந்த மாதிரி குளிக்க ஆரம்பிங்க. நாம் உடம்பைப் பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பீடை, நம்மை முன்னேற விடாமல் தடுக்கும். முதலில் அந்த பீடையை ஒழிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் எந்த கிழமையை தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் சரி. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி.

- Advertisement -

வெதுவெதுப்பாக நீங்கள் குளிக்கும் தண்ணீரில் 5 வில்வ இலைகளை போட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து அந்த வில்வ இலை ஊறின தண்ணீரில் தலைக்கு குளித்து விட வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் உடம்பை எந்த எதிர்மறை ஆற்றலும் பிடிக்காது. எந்த எதிர்மறை ஆற்றலும் தாங்காது.

உடம்பை பிடித்த தரித்திரம் பீடை விலகும். இதுவே உங்களுக்கு முதல் வெற்றியை கொடுக்கும். இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் பசு பரிகாரம். இந்த பசு மாட்டு பரிகாரம் கர்ம வினையால் வரக்கூடிய தோல்வியை தடுக்கும்.

- Advertisement -

வாழ்வில் முன்னேற பசுவிற்கு கொடுக்க வேண்டிய பொருள்

இந்த பரிகாரத்தை குளித்து முடித்துவிட்டு சுத்த பத்தமாக செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை செய்தாலும் சரிதான். அல்லது மற்ற கிழமைகளில் செய்தாலும் சரிதான். வீட்டில் சமைத்த இந்த உணவை தான் கொடுக்க வேண்டும். உங்கள் கையால் சமைத்துக் கொடுக்கணும்.

குடும்ப தலைவி சமைத்ததை கொண்டு போய் பசமாட்டுக்கு கொடுக்கணும். தயிர் சாதம். வேக வைத்த உருளைக்கிழங்கு. தாலிக்காத தயிர்சாதமாக இருக்கணும். கொஞ்சமாக உப்பு போட்டு வேக வைத்த உருளைக்கிழங்கு. இந்த இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நல்ல தண்ணீரை ஊற்றி உங்கள் கையை கொண்டு கரைத்து விடுங்கள்.

- Advertisement -

மாடு தாகத்திற்கு குடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். ரொம்பவும் கட்டியாக சாப்பிட முடியாமல் வைக்காதீங்க. பசுமாதா இதை குடித்து விட வேண்டும். அந்த அளவுக்கு கரைத்து மாட்டு தொட்டியில் கொண்டு போய் உங்கள் கையால் ஊற்றலாம். அப்படி இல்லை என்றால் இதே பாத்திரத்தில் பசுவிற்கு குடிப்பதற்காக வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: வாஸ்து தோஷத்தை நீக்கும் 3 பூக்கள்

இதை யார் முன்னேற வேண்டும் என்று துடிக்கிறீர்களோ, யார் வாழ்க்கையில் விஸ்வரூப வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களது கையால் பசு மாட்டிற்கு வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த இரண்டு விஷயங்களையும் தொடர்ந்து செய்து வாருங்கள் நீங்கள் விஸ்வரூப வெற்றியை அடைந்தே தீருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -