வியாபாரம் செழிக்க மட்டை தேங்காய் பரிகாரம்

business pariharam
- Advertisement -

தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கும் நபர்கள் தங்கள் தொழிலிலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுவதற்காக கடினமாக உழைக்கவும் செய்வார்கள். உழைத்து முன்னேற வேண்டும் என்று ஆசைப்படும் நபர்களில் பலரும் தொழில் மற்றும் வியாபாரத்தை தேர்வு செய்து இருப்பார்கள்.

தன்னுடைய சொந்த காலில் நின்று தன்னுடைய வியாபாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பது மட்டுமே தங்களின் உயரிய லட்சியமாக நினைத்து பாடுபடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்கவும் எந்த வித தடைகளும் ஏற்படாமல் இருக்கவும் மட்டை தேங்காயை வைத்து செய்யக்கூடிய எளிய பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக வியாபாரம் செய்ய ஆரம்பிப்பதற்கும் முன்பாக வியாபாரத்தை தொடங்க நினைப்பவர் தங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் வியாபாரத்தை தொடங்கினால் அவர்களுக்கு கிரகத்தினால் எந்த வித தோஷங்களும் ஏற்படாது. அதையும் மீறி குலதெய்வத்தின் அருளோடு ஆரம்பிக்கும் பொழுது ஏற்படக்கூடிய தடைகள் அனைத்திலிருந்தும் விலகி நல்லபடியாக தொழிலை ஆரம்பித்து விடுவார்கள்.

ஆரம்பித்த தொழிலில் முன்னேற வேண்டும் என்று எண்ணத்தில் கடினமாக உழைத்து முன்னேற ஆரம்பித்தால் அவர்களுடன் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்தவர்கள் இவ்வளவு விரைவில் முன்னேறி விட்டானா என்ற ஒரு கெட்ட எண்ணத்தில் கண் திருஷ்டியாகவோ அல்லது துர் சக்திகளாலோ கெடுதல்கள் செய்ய நினைப்பார்கள். இப்படி எந்த வகையான பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கி வியாபாரத்தை செழிப்புடன் நடத்துவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகார முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு மட்டை தேங்காய் வேண்டும். முதலில் மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திர நாளன்று ஒரு மட்டை தேங்காயை வாங்க வேண்டும். அதை தண்ணீரில் கழுவி விட்டு அதற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதை மஞ்சளில் நனைத்து நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இந்த மஞ்சள் துணியில் சந்தனம் குங்குமம் இட்ட மட்டை தேங்காயை வைத்து அதனுடன் தங்கள் கையில் எவ்வளவு சில்லறை காசுகள் இருக்கிறது அதை அனைத்தையும் வைத்து நன்றாக கட்டி தொழில் அல்லது வியாபாரம் நடக்கும் ஸ்தலங்களில் வாசலில் கட்டிவிட வேண்டும். பிறகு தினமும் இந்த மட்டை தேங்காய்க்கு குங்கிலிய புகை போட்டு தூபம் காட்ட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலிலும் வியாபாரத்திலும் ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி எப்பேற்பட்ட சக்திகளாக இருந்தாலும் அந்த துர் சக்திகள் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் இந்த மட்டை தேங்காயும் குங்கிலிய புகையும் தொழிலை காப்பாற்றும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற வாராஹி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

- Advertisement -