வியாபாரம் சிறப்பாக நடக்க பரிகாரம்

durgai
- Advertisement -

கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு, ஜன வசியமும், பணவசியமும் கட்டாயம் தேவை. நிறைய மனிதர்கள் கடைக்கு வந்து போனால் தான் வியாபாரம் நடக்கும். அப்போதுதான் நிறைய லாபமும் நமக்கு பெருகும். கடைவீதிகளில் பார்த்தால் உங்களுக்கு தெரியும். வரிசையாக மல்லிகை பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கும்.

எல்லா கடைகளிலும் ஒரே மாதிரியான மளிகை பொருட்கள் தான் விற்கும். சில இடங்களில் தரம் கொஞ்சம் உயர்வாக இருக்கும். சில இடங்களில் தரம் கொஞ்சம் குறைவாக இருக்கும். அதற்கு ஏற்றது போல அதற்கான விளையும் நிர்ணயிக்கப்படும். சில மளிகை கடைகளில் மட்டும் கூட்டம் அலைமோதும். ஏனென்றே தெரியாது.

- Advertisement -

கேட்டால் அந்த கடை ராசியான கடை என்று கூட சில பேர் சொல்லுவார்கள். இப்படி ஒரு குறிப்பிட்ட கடைக்கு மட்டும் பண வசியம், ஜன வசியம் இருப்பதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் மகாலட்சுமி கடாட்சம் தான். பணத்தை ஈர்க்கும் தன்மை அந்த கடைக்காரருக்கு இருக்கிறது என்று சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் அந்த மளிகை கடைக்காரருக்கு நேரம் நல்லா இருக்குது அப்படின்னு சொல்லி ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். இதே போல நம்முடைய கடையிலும் வியாபாரம் நடக்க வேண்டும் என்றால், நாம் என்ன பரிகாரம் செய்வது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரம் இருக்கிறது. இதை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கடைக்கும் வியாபாரம் தேடி வரும்.

- Advertisement -

வியாபாரம் சிறப்பாக நடக்க பரிகாரம்

ஒரே ஒரு விரலி மஞ்சள் வாங்கிக்கோங்க. செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு போங்க. விசேஷ பூஜைகள் அங்கே நடைபெறும். இந்த விரலி மஞ்சள் துர்க்கை அம்மன் பாதங்களில் வைத்து அந்த ராகு கால நேரத்தில் சிறிது நேரம் துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக முட்டிப்போட்டு உங்கள் கடையில் வியாபாரம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

மண்டியிட்டு வேண்டுவது என்று சொல்லுவார்கள் அல்லவா அதே போல வேண்டிக்கொண்டு, அந்த விரலில் மஞ்சளை எடுத்துக்கிட்டு வந்துடுங்க. ராகு காலத்திலேயே கடைக்கு வந்து ஒரு வெள்ளை துணியில் இந்த விரலி மஞ்சள் வைத்து முடிச்சாக கட்டி கடைக்கு உள்பக்கம் ஷட்டர் மூடுவீங்க அல்லவா, அதற்கு உள் பக்கமாக இந்த முடிச்சை ஒரு ஆணியில் தொங்கவிட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இதை செய்தாலே பணவசியம் ஜனவசியம் ஏற்படும்.

- Advertisement -

இதை செய்துவிட்டு சும்மாவே இருக்க கூடாது. கடையை நேரத்துக்கு திறந்து வியாபாரத்தில் உட்காரனும். வியாபாரத்தை விரிவு படுத்த நிறைய மக்கள் வந்து உங்கள் கடைகளில் பொருட்களை வாங்க தேவையான விளம்பரங்களை செய்யணும். முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த முயற்சிகளில் வெற்றியை கொடுக்க இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க

சின்னதா தள்ளு வண்டி வைத்திருப்பவர்கள் கூட இந்த மஞ்சளை உங்களுடைய தள்ளுவண்டிக்கு மேல் பக்கத்தில் வைக்கலாம். தவறு கிடையாது. காய்கறி வியாபாரம் செய்பவர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், ஹோட்டல் வைத்திருப்பவர்கள், மளிகை கடை, பேன்சி ஸ்டோர், டைலர், ஆட்டோமொபைல் என்று எந்த கடை வைத்திருந்தாலும் சரி உங்கள் கடையில் வியாபாரம் சிறக்க இந்த எளிமையான பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறவும்.

- Advertisement -