பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க

pana virayam
- Advertisement -

பணம் சம்பாதிப்பது எத்தனை கடினமான விஷயமோ, அதை விட கடினம் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது. பணத்தை சேமிக்க வேண்டும் எனில் முதலில் பணம் வீண்விரையம் ஆகாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் பணத்தை சேமிக்க முடியும். இங்கு பல பேருடைய நிலைமையோ கைக்கு பணம் வந்த பத்தாவது நிமிடத்தில் பணம் இருந்த இடம் தெரியாமல் சென்று விடும்.

இது போன்ற சூழ்நிலையில் பணத்தை சேமிப்பது என்பது முடியாத காரியம். ஆகையால் முதலில் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பணம் வீண்விரையம் ஆவதற்கும் நாம் செய்யும் சில தவறுகளும் காரணம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பணம் வீண்விரயம் ஆகாமல் இருக்க
பணம் நம் கையில் இருந்து வீணாக செலவு ஆகாமல் இருக்க முதலாவதாக நாம் செய்ய வேண்டியது வெள்ளிக்கிழமையில் நாம் பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது என்பது தான். எந்த அவசர சூழ்நிலையாக இருந்தாலும் கடன் கொடுக்காமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள். வேறு வழி இல்லாமல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் நீங்கள் பணத்தை கொடுத்த பிறகு அவர்களிடம் இருந்து ஒரு ரூபாயாவது திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக வெள்ளிக்கிழமையில் வெள்ளை நிற பொருட்களை நம் வீட்டில் இருந்து வெளியே அனுப்பக் கூடாது‌. அரிசி, பால், தயிர், சர்க்கரை போன்ற வெள்ளை நிறத்தில் உள்ள எந்த பொருளாக இருந்தாலும் அன்றைய தினம் நம்முடைய இல்லத்தில் இருந்து வெளியில் அனுப்புவதோ, பிறருக்கு கொடுப்பதோ செய்யவே கூடாது. இதன் மூலம் குடும்பத்தில் பணம் தங்காத நிலை உருவாவதோடு வறுமையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக வெள்ளிக்கிழமை அன்று என்ன ஒரு விசேஷமாக இருந்தாலும் தெய்வ திருஉருவம் பதித்த படங்களை அன்பளிப்பாக தருவதோ அல்லது விக்கிரகங்களை அன்பளிப்பாக தருவதோ செய்யக் கூடாது. சிலர் அன்றைய தினத்தில் தெரிந்தவர்களுக்கோ நெருங்கிய உறவினருக்கும் ஏதேனும் விசேஷம் என்றால் அன்பளிப்பாக தருவதற்கு இதைப் போல விஷயங்களை செய்வார்கள். அன்றைய தினத்தில் இதை செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இந்த விஷயங்களை எல்லாம் தவிர்ப்பதோடு சேர்த்து வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை மலர் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனால் பணம் வீண் விரையும் ஆகாது என்பதோடு, வீட்டில் பண வரவு அதிகரிக்கும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். வீட்டில் பணம் தங்காமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட நாம் கடைபிடிக்கும் இந்த வழிமுறைகளே முக்கியமான காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: பணம் பெருக மண் பரிகாரம்
வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடாதவற்றையெல்லாம் செய்யாமல் இருப்பதோடு இந்த ஒரு எளிய முறையையும் கடைப்பிடிக்கும் போது பணம் நம் கையில் இருந்து வீண்விரயம் ஆகாமல் சேர்ந்து கொண்டு செல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பதிவில் உள்ள தகவலின் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதைப் பின்பற்றி பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -