தீராத நோய் தீர பரிகாரம்

pray-lingam
- Advertisement -

இன்று மனிதன் தான் அனுபவிக்கும் ஒவ்வொரு இன்பமும் துன்பமும் அவனுடைய கர்ம வினைகளின் தாக்கமே. இது நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களாகவும் இருக்கலாம். நம் முன்னோர்கள் செய்த பாவங்களாக இருக்கலாம். இந்த கர்மாக்களின் பலன் தான் வாழ்க்கையில் கடன், தீராத வியாதி வாழ்க்கையில் துன்பம் போன்றவற்றை எல்லாம் அனுபவிப்பது.

அதிலும் ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக வியாதிகள் சரியாகாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படி கர்மாவினால் தொடரும் வியாதிகளின் தாக்கத்தை குறைக்க இந்த பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நீண்ட நாள் வியாதிகள் குணமாக

இந்த பரிகாரத்தை நாம் பிரதோஷ நாளில் தான் செய்ய வேண்டும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்லுங்கள் உள்ளே செல்லும் போது கையில் ஒரு வில்வத்தையும் ஒரு மிளகையும் எடுத்துச் செல்லுங்கள்.

ஆலயத்தின் உள்ளே சென்ற உடன் நந்தி பகவானை வேண்டி உங்களுடைய பாவங்கள் குறைந்து அதன் தாக்கத்தால் உருவான வியாதிகள் சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அடுத்து சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள். அப்போது சிவபெருமான் முன்பாக நின்று உங்களுடைய வியாதிகள் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை தவிர்த்து உங்களுக்கு வேறு துன்பங்கள் இருந்தாலும் அதையும் சரி செய்து தர வேண்டி மனதார சிவபெருமானை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு சிவபெருமானை பார்த்தவாறு கையில் உள்ள வில்வத்தையும் மிளகையும் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

ஒரு வேளை உங்கள் வீட்டில் யாரேனும் மிகவும் உடல் நலக் கோளாறாக உள்ளார்கள். அவர்களால் நடக்க முடியாது என்றால் இது போல செய்து அவர்களுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம். இன்னும் சிலருக்கு எதுவும் சாப்பிட கூட முடியாது. அப்படியானவர்களுக்கு இந்த ஒரு வில்வத்தையும் மிளகையும் தலையணை அடியில் வைத்து உறங்க செய்தால் அதுவும் நல்ல பலனை தரும்.

- Advertisement -

இத்துடன் தயிர் சாதத்தை அன்னதானமாக செய்யும் போது நம்முடைய கர்மாக்கள் விரைவில் குறையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாவங்கள் எல்லாம் செய்து விட்டு இதை செய்தால் சரியாகுமா என்றால் ஆகாது. நாம் தெரியாமல் செய்த பாவங்களும் நம் முன்னோர்கள் செய்த பாவத்தின் தொடர்ச்சியாக,நாம் முன்பிறவியில் செய்த பாவத்தின் பலனையும் தான் இந்த பரிகாரம் சரி செய்யும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் செல்வம் அதிகரிக்க வெண்கடுகு பரிகாரம்

பரிகாரம் தான் செய்கிறோமே என்று தொடர்ந்து பாவங்களை செய்யக் கூடாது. இந்த பரிகாரத்துடன் உங்கள் வியாதிக்கான மருத்துவ சிகிச்சை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வாருங்கள். இது வரை என்ன மருந்து சாப்பிட்டும் சரியாகாத உங்கள் வியாதியும் சீக்கிரத்தில் சரியாகி நல்ல முறையில் நலமுடன் வாழ சிவபெருமான் அருள் புரிவார் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -