வியாழக்கிழமை அன்று இதை மட்டும் செய்தாலே போதும். நிரந்தரமான வேலை, நல்ல தொழில், கைநிறைய வருமானம், மனநிறைவான வாழ்க்கை, அத்தனையும் கிடைக்கும்.

sivan-curd-rice
- Advertisement -

ஒரு மனிதனுக்கு நிரந்தரமான வருமானம் தரக்கூடிய வேலை இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நிரந்தரமாக வருமானம் கொடுக்கக்கூடிய சொந்த தொழில் அமைய வேண்டும். இந்த இரண்டுமே சரிவர அமையவில்லை என்றால் வருமானத்தில் பிரச்சனை இருக்கும். பண கஷ்டம் இருக்கும். கடன் தொல்லை இருக்கும். அவனால் நிறைவான வாழ்க்கையை நிச்சயமாக வாழ முடியாது. ஒரு வேலைக்காக செல்வார்கள். மூன்று மாதம் கூட நிலையாக நிற்க மாட்டார்கள். அந்த வேலை அவர்களுக்கு பிடித்திருந்தாலும், பிரச்சனைகள் வந்து அந்த வேலையை விட வேண்டிய சூழ்நிலை வந்து இருக்கும்.

சொந்தத் தொழிலை தொடங்கியிருப்பார்கள். மூன்று மாதம் அல்லது ஆறு மாதம் அந்தத் தொழிலை கஷ்டப்பட்டு நடத்தி வருவார்கள். ஆனால் அதிலிருந்து பெரியதாக லாபம் எதுவும் கிடைத்திருக்காது. கடைசி சமயத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அந்த தொழிலை விட்டுவிட்டு, மீண்டும் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். இப்படி செய்யக்கூடிய தொழிலில் மாற்றம் வரும். கையிலிருக்கும் முதலீடு கரைந்து போகுமே தவிர, தொழிலிலிருந்து வருமானத்தை ஈட்ட முடியாமல் தவித்து வருவார்கள்.

- Advertisement -

உங்களுக்கு இது போன்ற எந்த பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பரிகாரத்தை, 6 மாதம் செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல மாற்றம் தெரியும். மாதத்தில் ஒருமுறை வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பழமையான ஏதாவது ஒரு சிவன் கோவில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை அன்று காலையில் உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு பிரசாதத்தை சமைத்துக் கொள்ளுங்கள். அதை எடுத்துக்கொண்டு சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். சிவபெருமானிடம் அந்த பிரசாதத்தை வைத்து அர்ச்சனை செய்து, உங்களுக்கு வேலையில் தொழிலில் இருக்கக்கூடிய பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் ஆக கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த பிரசாதத்தை கோவிலுக்கு வெளியில் யாராவது ஏழை எளிய மக்கள் இருந்தால் அவர்களுக்கும் அன்னதானமாக கொடுக்கலாம். (யாருக்கு நல்ல தொழில் அமைய வேண்டுமோ, யாருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமோ அவர்களுடைய கையால் இந்த அன்னதானத்தை செய்ய வேண்டும்.)

- Advertisement -

மாதத்தில் ஒரு நாள் வளர்பிறை வியாழக்கிழமையில் இந்த பரிகாரத்தை, இந்த அன்னதானத்தை மனநிறைவோடு செய்து பாருங்கள். இத்தனை பேருக்குத் தான் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கணக்கு கிடையாது. பசியோடு இருக்கும் கஷ்டப்படும் 10 பேருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை. நம்பிக்கையோடு செய்யுங்கள்.

எனக்கு இறை நம்பிக்கையே கிடையாது என்று சொல்லுபவர்கள், வியாழக்கிழமை அன்று ஏதாவது ஒரு உணவை உங்கள் வீட்டில் தயாரித்து அதைக் கொண்டு போய் ஒரு ஆசிரமத்திற்கு கொடுத்து அங்கு உள்ளவர்களுக்கு அன்ன தானம் செய்தாலும் உங்களுக்கு உண்டான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.

வியாழக்கிழமை அன்ன தானம் செய்பவர்களுக்கு நிச்சயமாக கஷ்டத்திற்கு உண்டான விடிவு காலம் பிறக்கும். நல்ல தொழில் அமையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்‌. நீங்கள் வேலை செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அந்த வேலையின் மூலம் நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் படிப்படியான பதவி உயர்வும் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு பரிகாரத்தின் மீது முழு நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்.

- Advertisement -