வியாழக்கிழமை தோறும் இதை மட்டும் செய்தால் போதும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கத் தொடங்கிவிடும்.

thilagam
- Advertisement -

நம்முடைய முயற்சியில் வெற்றி காண்பதற்கு முன்பு நிச்சயமாக பல தடைகள் வரத் தான் செய்யும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தடைகளை தகர்த்து முன்னேறி வரும் பட்சத்தில் மட்டுமே, வெற்றிவாகை சூட முடியும். தடைகளைக் கண்டு துவண்டு போக கூடாது. இந்த தடைகள் ஆண்டவனால் நமக்கு கொடுக்கப்படும் சோதனைகள். சோதனைகளை வென்றால் தானே சாதனை படைக்க முடியும். முதலில் இதை மனதில் வைத்துக் கொண்டு இன்றைய பரிகாரத்தை தெரிந்து கொள்வோமா.

guru-bhagavan

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த குருவுக்கு உரிய நாள் இந்த வியாழக்கிழமை. வியாழக்கிழமையில் குரு பகவானை நினைத்து வழிபாடு செய்ய யாரும் மறக்க வேண்டாம். காலையில் சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, குரு பகவானுக்கு முதலில் நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு குண்டு கிழங்கு மஞ்சள், விரலி மஞ்சள் இதில் உங்களுக்கு எந்த மஞ்சள் கிழங்கு கிடைத்தாலும் சரி, அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் பயன்படுத்தக்கூடாது.

- Advertisement -

அந்த மஞ்சளில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இலேசாக இழைத்து, வலது கை மோதிர விரலால் அந்த மஞ்சளை தொட்டு உங்களுடைய நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். குரு பகவானை நினைத்து மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும் என்று வியாழக்கிழமைகளில் இதை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

virali-manjal

இப்படி செய்தால் உங்களுடைய ஜாதகத்தில் குருபகவான் பலவீனமாக இருந்தாலும் சரி, வலுப்பெறும். குருபகவானால் பல நன்மைகள் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்க தொடங்கும். இது ஒரு முதல் வழி. இதற்கு இரண்டாவது ஒரு வழியும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வியாழக்கிழமை அம்மனுடைய வழிபாட்டை செய்தாலும் வீட்டில் மங்களகரமான காரியங்கள் நடக்கும். வியாழக்கிழமை அன்று அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு மஞ்சள் தூள் இவைகளை தானமாக கொடுக்க வேண்டும். முடிந்தால் மஞ்சள் வஸ்திர தானம் செய்வது மிகவும் நல்லது. மஞ்சள் நிறத்தில் உங்களால் முடிந்த புடவையை வாங்கி அம்மனுக்கு சாத்தி அர்ச்சனை அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்தாலும் வீட்டில் தடைபட்ட மங்கல காரியங்கள் நடக்கும். இதை குறிப்பாக வியாழக்கிழமை செய்ய வேண்டும். கூடவே அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில் ஏதேனும் பிரசாதத்தை நிவேதனமாக வைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

kamatchi-amman

உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ வியாழக்கிழமை மஞ்சளை கோவிலுக்கும் சுமங்கலிப் பெண்களுக்கும் தானமாக வாங்கி கொடுக்கலாம். கோவிலுக்கு வருகை தரும் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கை தானமாகக் கொடுங்கள். ஒரே ஒருமுறை மட்டுமாவது இந்த மஞ்சள் நிற வஸ்திரத்தை வியாழக்கிழமை அம்மனுக்கு செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலனைப் பெறுவீர்கள். இவ்வாறாக வியாழக்கிழமை அன்று மேல் சொன்ன ஆன்மீக ரீதியான சுலபமான வழிபாட்டு முறைகளை செய்தாலே போதும். உங்களுடைய வாழ்க்கையில் நல்ல வித்தியாசம் தெரியும். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -