இந்த 1 காய் போதும். பார்லருக்கு போகாமலேயே தங்க நிறத்தில் சும்மா தகதகன்னு அப்படியே மின்னத் தொடங்கி விடுவீர்கள்.

face24
- Advertisement -

முகத்தை தங்கம் போல ஜொலிக்க செய்வதற்கு இன்று செயற்கை முறையில் நிறைய ஃபேசியல், ப்ளீச்சிங் எல்லாம் வந்துவிட்டது. பியூட்டி பார்லருக்கு சென்று தங்களுடைய முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்கின்றோம். ஆனால் அதெல்லாம் தேவையில்லை. சராசரி வருமானம் வருபவர்கள் கூட உங்களுடைய முகத்தை செலவே இல்லாமல் தங்கம் போல பொலிவாக ஜொலிக்க செய்யலாம். அதற்கு எளிமையான வீட்டில் இருந்தபடியே ஒரு அழகு குறிப்பு தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

செலவே இல்லாமல் தங்கம் போல ஜொலிக்க அழகு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மஞ்சள் பூசணி. இதை அரசாணிக்காய் என்று சொல்லுவார்கள். சில இடங்களில் பரங்கிக்காய் என்று சொல்லுவார்கள். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த பூசணிக்காயை எடுத்து தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுந்துபோல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு போட்டு, அதில் அரைத்த இந்த மஞ்சள் பூசணி விழுதை ஊற்றி கலந்தால் ஒரு பேக் உங்களுக்கு கிடைக்கும். இந்த பேக்கோடு தேன் 1 ஸ்பூன், சேர்த்து கலந்து உங்களுடைய முகம் கழுத்து கைகால் இப்படி உடலின் எல்லா இடங்களிலும் இதை தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் செய்து குளித்து விட்டால் முகம் மட்டுமல்ல உங்களுடைய உடம்பு முழுவதும் தங்கம் போல பள பளப்பாக ஜொலிக்க தொடங்கி விடும். ஒரு முறை இதை பயன்படுத்தும் போதே இரண்டு மடங்கு நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம்.

உங்களுடைய சருமம் ரொம்பவும் கருத்துப் போய்விட்டது என்றால், இந்த பேக்கோடு நீங்கள் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்தும் உங்களுடைய சருமத்தில் பேக்காக போடலாம். சில பேருக்கு எலுமிச்சை பழச்சாறு ஒத்து வராது என்றால் அதை ஸ்கிப் செய்து கொள்ளவும். சில பேருக்கு கடலை மாவு ஒத்து வராது. அலர்ஜியை கொடுக்கும். அவர்கள் பாசிப்பருப்பு மாவு, மசூர் டால் மாவு, பச்சைபயிறு மாவு போன்ற வேறு ஏதாவது மாவோடு கூட இந்த மஞ்சள் பூசணி விழுதை ஊற்றி கலந்து முகத்தில் பேக்காக போடலாம்‌.

- Advertisement -

இது எதுவுமே உங்களுக்கு செட்டாகாதா வெறும் மஞ்சள் பூசணியை விழுதாக அரைத்து அதை எடுத்து அப்படியே முகத்தில் தடவி மசாஜ் செய்து கொண்டாலும் நல்ல ரிசல்ட் நிச்சயமாக கிடைக்கும். வாரத்தில் ஒருமுறை அல்ல. இரண்டு முறை அல்ல தினம் தோறும் இந்த மஞ்சள் பூசணிக்காயை நீங்கள் சருமத்தில் போடலாம்‌. எந்த பக்கம் விளைவுகளும் ஏற்படாது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் முகப்பரு மங்கு போன்ற பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையவும் செய்யும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை எளிதாக விரட்டி அடிக்க 1 ஸ்பூன் உளுந்து இருந்தால் போதுமே! முகக் கருமை நீங்க எளிய டிப்ஸ் என்ன?

இந்த அழகான அழகு குறிப்போடு சேர்த்து இன்னும் ஒரு சில விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் சாப்பிடக்கூடிய உணவு பழக்க வழக்கங்களின் மூலம் கூட நமக்கு சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படும். தோல் சுருக்கம் ஏற்படும். அந்த வரிசையில் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை நிறைய சாப்பிடக்கூடாது. டீ காபி அதிகம் குடிக்கக் கூடாது. அதிகமாக வெள்ளை சர்க்கரையை உணவோடு சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதை எல்லாம் பின்பற்றி வந்தீர்கள் என்றால் உங்களுடைய முகச்சுருக்கமானது தள்ளிப் போகும். வயதான தோற்றம் தள்ளிப் போகும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -