12-12 அமாவாசையில் பணக்கஷ்டம் தீர செய்ய வேண்டிய பரிகாரம்.

amavasai
- Advertisement -

பல நாள் கஷ்டத்தை கூட ஒரு நாளில் போக்குவதற்கு நமக்கு சில அரிதான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம், நாளை நமக்கு கிடைத்திருக்கிறது. 12-12-2023 அற்புதமான நாளில் வந்திருக்கக்கூடிய தேய்பிறை கார்த்திகை அமாவாசை அன்று பின் சொல்லக்கூடிய விஷயங்களை எல்லாம் நீங்கள் பின்பற்றினால் உங்கள் பல நாள் பணக்கஷ்டம், பல நாள் மன கஷ்டம் உடனே தீரும். நாளைய தினம் அவசியம் நாம் செய்ய வேண்டிய அந்த பரிகாரங்கள் என்னென்ன ஒவ்வொன்றாக இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பணக்கஷ்டம் மன கஷ்டம் தீர ஆன்மீக பரிகாரங்கள்

முதலில் நாளை அமாவாசை எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் வரை இருக்கிறது என்று பார்த்து விடுவோம். நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 6:23 மணிக்கு ஆரம்பிக்கும் அமாவாசை திதி, புதன்கிழமை காலை 5:49 வரை இருக்கிறது. முதலில் பணக்கஷ்டம் தீர பரிகாரத்தை பார்த்து விடுவோம். நாளைய தினம் அமாவாசை அன்று மதியம் 12:12 மணி அளவில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யணும்.

- Advertisement -

12 மணி, 12 நிமிடம் ஆனதும் சரியாக அந்த நேரத்தில், 3 லவங்கம், 3 ஏலக்காய், முழுசாக இருக்கும் 1 அன்னாசிப்பூ இந்த மூன்றையும் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பௌலில் போட்டு உங்கள் உள்ளங்கைகளில் வைத்து குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று வீட்டில் பண வரவு பெருக வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும் என்று நினைத்து இந்த கிண்ணத்தில் இருக்கும் பொருட்களை அப்படியே கொண்டு போய் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் திறந்தபடி வைத்து விடுங்கள்.

முன்கூட்டியே ஒரு கண்ணாடி கிண்ணத்தில் மூன்று பொருட்களையும் போட்டு வைத்து விடுங்கள். 12:12 மணி அடித்தவுடன் இதை கொண்டு போய் பீரோவில் வைத்து விடுங்கள். மதியம் 12:00 மணிக்கு வேலையில் இருப்பவர்கள் இதை இரவு 12:12 மணி அளவில் செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு உடனடியாக ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த காகிதத்தில் உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதலை 12 முறை எழுதுங்கள். பச்சை நிற பேனாவில் எழுதினால் ரொம்ப ரொம்ப சிறப்பு. உதாரணத்திற்கு கடன் சுமை தீர வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும்.

நல்ல கணவன் அமைய வேண்டும். நல்ல மனைவி அமைய வேண்டும் என்றும் எழுதிக் கொள்ளலாம். மேல்படிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டும். கணவன் மனைவி பிரச்சினை தீர வேண்டும். இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை சரியாக, அந்த ஒரு பிரச்சனையை அந்த காகிதத்தில் 12 முறை எழுத வேண்டும்.

- Advertisement -

நாளைக்கு இந்த விஷயம் நடந்தால் நல்லாயிருக்கும். இந்த ஒரு வாரத்திற்குள் இந்த விஷயம் நடக்கணும். அப்படின்னு சில தேவைகள் நம் மனதில் இருக்கும். அந்த தேவையை ஒரு வெள்ளை காகிதத்தில் நாளைய தினம் மதியம் 12:12 மணி அளவில் உட்கார்ந்து, 12 முறை உங்களுடைய குறிக்கோளை எழுதிட்டு அந்த பேப்பரை மடித்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

நீங்கள் எழுதி வைத்த இந்த குறிக்கோள் அடுத்த அமாவாசைக்குள் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. அந்தக் குறிக்கோள் உங்களுக்கு நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் சரி, அடுத்த அமாவாசை அந்த பேப்பரை எடுத்து நெருப்பில் கொளுத்தி அந்த சாம்பலை காற்றோடு காற்றாக கலக்க விட்டு கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

பரிகாரம் பலிக்குமா என்று சோதிப்பதற்காக நடக்காத ஒரு விஷயத்தை இந்த பேப்பரில் எழுதக்கூடாது. நம் தகுதிக்கு மீறிய விஷயங்களை இந்த பேப்பரில் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது சோதனை செய்து இந்த நல்ல நாளை தவிர விட்டுராதீங்க. நமக்கே தெரியும். நம் வாழ்க்கைக்கு என்ன தேவை என்று, நம் வாழ்க்கைக்கு எது அத்தியாவசியம் என்று அந்த ஒரு விஷயத்தை எழுதுங்கள்.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை அமாவாசை துர்கை அம்மன் வழிபாடு

சில பேருக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுதல் இருக்கும். வியாபாரம், வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று கூட அதை கூட குறிப்பிட்டு நீங்கள் அந்த காகிதத்தில் எழுதலாம். நிச்சயம் அந்த நல்லது, ஒரு சில நாட்களில் உங்களுக்கு நடக்கும். பிரபஞ்ச சக்தி ஒன்று சேர்ந்து இந்த பூமிக்கு வரக்கூடிய அதிசய நாள் தான் அமாவாசை நாள். இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் கஷ்டம் என்பதை இருக்காது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -