வாழ்க்கையில் அடைய வேண்டிய இந்த 16 செல்வங்களை அடைய தவறாமல் கடைபிடிக்க வேண்டிய இந்த ஒரு விஷயத்தை பற்றி நீங்கள் அறிவீர்களா?

temple-prayer
- Advertisement -

திருமணம் ஆனவர்கள் அல்லது யாராவது பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் வாயிலிருந்து ‘பதினாறு செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ என்று கூறுவதை கேட்டிருப்போம். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பது பதினாறு பிள்ளைகளை குறிக்கும் சொல் அல்ல! பதினாறு செல்வங்களை குறிக்கும் சொல் ஆகும். எனவே அந்த பதினாறு செல்வங்களையும் அடைவதற்கான எளிய வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய நினைப்பது என்னவோ இந்த பதினாறு வகையான செல்வங்களையும் தான். இதில் எல்லாவற்றையும் ஒருவர் அடைந்து விட்டால் அவர் முழுமை பெறுகின்றார் அல்லது மீண்டும் மீண்டும் பிறந்து மனிதப் பிறவியை முழுமையாக கழிக்க வேண்டியிருக்கும். இதை கர்மா என்கிறோம். அவரவருடைய பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இந்த பதினாறு செல்வங்களையும் ஒரு ஜென்மத்தில் அடைகின்றனர். புண்ணியம் செய்தவர்கள் சிலர் இப்பிறவியிலேயே இந்த 16 விஷயங்களையும் அடைந்து விடுகின்றனர். ஆனால் பாவம் செய்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைந்து பின்னர் மோட்சத்தை முழுமையாக பெறுகின்றனர். மீண்டும் பிறவாமை என்கிற வரத்தை அடைகின்றனர்.

- Advertisement -

முதலில் பதினாறு செல்வங்கள் என்பது யாது?
புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, நன்மக்கள், பொன், நெல், அறிவு, பெருமை, ஆயுள், நல்லூழ், இளமை, துணிவு, நோயின்மை, நுகர்ச்சி, பொருள்.

ஒருவர் புகழினை அடைந்தால் அவர் கல்வியில் குறைந்தவராக இருப்பார். நன்மக்களைப் பெற்றால் நோயுற்றவராக இருப்பார். பெருமை கிடைத்தால் ஆயுள் குறையும். ஆயுள் இருந்தால் பொருள் இருக்காது. இப்படி ஏதாவது ஒரு குறை இருந்தால் நீங்கள் பிறவாமை என்னும் வரத்தை அடைய முடியாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி இருக்கும். இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைந்த பிறகே நீங்கள் மீண்டும் மண்ணுலகில் வராமல் இருப்பீர்கள்.

- Advertisement -

இந்த பதினாறு செல்வங்களையும் இப்பிறவியிலேயே அடைந்து மீண்டும் பிறவாமை என்னும் வரத்தை அடைவதற்கு செய்ய வேண்டியது என்ன? காலையில் எழுந்ததும் முதலில் சூரியனை நமஸ்கரித்து கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு செய்த பாவங்கள் பாதியாய் குறையும் என்கிற ஐதீகம் உண்டு. பின்னர் காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் பூஜை அறையை சுத்தமாக வைத்து மகாலட்சுமி மற்றும் மற்ற இஷ்ட தெய்வங்களுக்கு சேர்த்து இரண்டு விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். நீங்கள் 2 குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்குடன் மண் அகல் விளக்கு ஒன்றை சேர்த்து ஏற்றலாம்.

உலோக விளக்குகளை விட, மண்ணால் செய்யப்பட்ட இயற்கையான அகல் விளக்கிற்கு நிறையவே சக்திகள் உண்டு. எனவே வீட்டில் எத்தனை விளக்குகள் நீங்கள் ஆடம்பரமாக வாங்கி வைத்து ஏற்றினாலும் ஒரு மண் அகல் விளக்கு வாங்கி வைத்து அதில் நெய் ஊற்றி திரி இட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் 16 செல்வங்களையும் அடையலாம் என்பது நியதி. பின்னர் மாலை வேளையில் இல்லாதவர் மற்றும் இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை உங்களுடைய சக்தியை பயன்படுத்தி அவர்களுக்கு செய்ய வேண்டும். வயதானவர்களை மதித்துப் போற்ற வேண்டும். இப்படி நீங்கள் நடந்து கொண்டால் பதினாறு செல்வங்களை இப்பிறவியிலேயே அடையலாம்.

- Advertisement -