நாலு வரியில் விஷ்ணு சஹஸ்ரநாமம்

vishnu
- Advertisement -

நாராயணா ஏன்ற நாமத்தை தினம் தினம் சொல்லிக் கொண்டே இருந்தாலே நமக்கு மோட்சம் கிட்டும் என்று சொல்லுவார்கள். அப்படி அந்த நாராயணனுக்கு உண்டான 1000 நாமங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வைத்துள்ள பாடல் வரிகள் தான் இந்த விஷ்ணு சகஸ்ரநாமம். வைணவ வழிபாட்டில் இந்த விஷ்ணு சகஸ்வர நாமம் என்பது மிக மிக புனிதமானது. தினமும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை படிப்பது ரொம்ப ரொம்ப நல்லது.

ஆனால் ஒருவரால் விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் படிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினால், அது நிச்சயம் முடியாது. நம்முடைய வேலை பளு காரணமாக அதற்கான நேரத்தை நம்மால் ஒதுக்க முடியாது. விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுமையாக படிக்க முடியாது என்பவர்கள் தினமும் விஷ்ணுவை நினைத்து இந்த நான்கு வரிகளை சொன்னாலே போதும்.

- Advertisement -

விஷ்ணு சகஸ்ரநாமத்தை முழுசாக படித்த பலனை நம்மால் பெற முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த நான்கு வரி மந்திரம் என்ன, அந்த வரிகளை படிக்கும் போது நாம் எப்படிப்பட்ட பலன்களை எல்லாம் ஒரு சேர பெறலாம் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்கள் இதோ உங்களுக்காக.

விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒரு முறை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ கோடி புண்ணியம் கிடைக்கும். செல்வ வளம் பெருகம். நோய் நொடி இல்லாமல் வாழலாம். நல்ல திருமண வாழ்க்கை அமையும். குடும்ப ஒற்றுமை நிலவும். குழந்தை பாக்கியம் பெறலாம், எதிரி தொல்லையிலிருந்து விடுபடலாம் கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

- Advertisement -

எதிர்பாராமல் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க, விபத்திலிருந்து தப்பிக்க நல்ல தூக்கம் வர, கெட்ட கனவுகள் வராமல் இருக்க, இப்படி பல வகையான நன்மைகளை நமக்கு தரக்கூடிய பலன் இந்த ஒரு விஷ்ணு சகஸ்ர நாமத்தில் அடங்கியிருக்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால் இந்த உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த நலனையும் நாம் பெற வேண்டும் என்றால் படிக்க வேண்டிய பாடல் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமம்.

தினமும் காலையில், மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்க விடுங்கள். சரி காதால் கேட்டால் மட்டும் போதுமா. நாம் வாயால் அந்த விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமத்தை சொல்ல பலனை பெறுவது எவ்வளவு பெரிய பாக்கியம். விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அப்படியே மொத்தமாக சுருக்கமாக அடக்கி நான்கு வரிகளில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வரிகளை படித்தால் விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமத்தை சொன்ன பலனை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

நான்கு வரியில் விஷ்ணு சஹஸ்ரநாமம்

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ரநாம தத்துல்யம்
ராம நாம வராணனே!

இதையும் படிக்கலாமே: பணம் நகை சொத்து சேர பஞ்சமி தீபம்

வெறும் நாளே வரிகள் தான் எளிமையான வரிகள் தான். தினமும் காலையில் விளக்கு ஏற்றி இந்த பாடல் வரிகளை சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய அன்றாட வேலைகளை செய்து பாருங்கள். எல்லா விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள். அந்த விஷ்ணு பகவானின் அருள் ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வாழ்வில் துயரங்கள் இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கையை ரசித்து வாழ தொடங்கி விடுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -