- Advertisement -
இருள் சூழ்ந்த என் மனதில்
விளக்கேற்ற வந்தவளே..
ரத்தம் ஊறிய என் உடலை
அன்பை தந்து வென்றவளே…
கண்ணாடி என் நெஞ்சில்
கல்லை கொண்டு எரிபவளே..
பின், காயத்திற்கு மருந்தாக
கண்ணீரை தருபவளே
- Advertisement -
உன்னோட நான் வாழ
யுகங்களும் போதாது
என்னோடு நீ இருக்க
இமைகள் ரெண்டும் தூங்காது..
ஒருவருக்கு காதல் வரும் அந்த நேரத்தில் அவர்களின் வாழ்க்கை வானவில்லாய் மாறும், இரவுகள் நீண்டுகொண்டு போகும். நாடி நரம்பு ரத்தம் என்ன அனைத்தும் காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை மட்டுமே உச்சரிக்கும். அந்த அளவிற்கு வலிமை உள்ளது காதல்.
இது போன்று மேலும் பல காதல் கவிதைகள் மற்றும் மனதிற்கு இனிய பல தமிழ் கவிதைகளை படிக்க தெய்வீகம் பக்கத்தோடு இணைந்திருங்கள்.
- Advertisement -