Virat Kohli : தோனியின் வீட்டில் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கேப்டன் கோலி

Dhoni-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து நாளை ராஞ்சி நகரில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

Jadhav

இதற்கான இந்திய அணி நேற்று விமானம் மூலம் நாக்பூர் நகரிலிருந்து ராஞ்சி வந்தடைந்தனர். ராஞ்சி நமது தல தோனியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தந்து ஊரில் கடைசியாக விளையாடப்போகும் போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்து இருந்தார்.

- Advertisement -

இரவு நேரத்தில் நடத்தப்பட்ட அந்த விருந்தில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக கலந்து கொண்டது. மேலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அமர்க்களமாக கேண்டில் லைட் டின்னரை ஏற்பாடு செய்து இருந்தார் தோனி. இந்த விருந்துக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலி தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் தோனி, கோலி, சாஹல், குல்தீப் மற்றும் பண்ட் ஆகியோர் இருந்தனர்.

- Advertisement -

இந்த புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனியின் உபசரிப்பினை அனைத்து வீரர்களும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

MS Dhoni : நிச்சயம் உங்களைத்தவிர இது போன்று விக்கெட் கீப்பிங் யாராலும் செய்ய முடியாது தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -