நாளை ஆயில்ய நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்திருக்கும் ஆடி அமாவாசை! வராகி தாயை நினைத்து இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் போதும். உங்கள் பண கஷ்டத்தை பாதாளத்தில் போட்டு புதைத்து விடுவாள் அந்த அம்மன்.

varahi
- Advertisement -

நாளைய தினம் ஆடி அமாவாசை. கூடவே சேர்ந்து ஆயில்ய நட்சத்திரமும் வந்திருக்கின்றது. ஆயில்ய நட்சத்திரம் என்பது வாராஹி அன்னை பிறந்த நட்சத்திரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளை நாம் சரியாக பயன்படுத்தி இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். கடன் சுமை குறையும், பணக்கஷ்டம் தீரும். வருமானம் அதிகரிக்கும் எதிரி தொல்லையில் இருந்தும் தப்பிக்கலாம். நாளைய தினம் வாராஹி அம்மனை நினைத்து சொல்ல வேண்டிய ஒரு வரி மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படிக்கலாம். உங்கள் வாழ்க்கையை பிடித்த கஷ்டம் அனைத்தும், உங்களை விட்டு நிரந்தரமாக நீங்கும்.

ஆடி அமாவாசை வாராகி வழிபாடு:
நாளை (16.08.2023) சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து, சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். காலை 6 மணிக்கு முன்பாகவே பூஜையறையில், ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வாராகி அம்மனை மனதார நினைத்து, குலதெய்வத்தையும் மனதார நினைத்து உங்கள் குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த ஒரு வரி மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். இந்த வழிபாட்டை ஆண்களும் செய்யலாம் பெண்களும் செய்யலாம். இந்த மந்திரத்தை ஆண்களும் சொல்லலாம் பெண்களும் சொல்லலாம்.

- Advertisement -

வராகி அம்மன் மந்திரம்:
‘ஓம் தனவ சங்கரி வர்ஷய வர்ஷய ஸ்வாஹா!’

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு வழக்கம் போல நீங்கள் உங்களுடைய அமாவாசை திதி தர்ப்பண வேலைகளை தொடங்கலாம். நாளைய தினம் அதாவது 16.8.2023 ஆம் தேதி மதியம் 2.00 மணிக்குள் அமாவாசை திதி தர்ப்பண வேலைகளை எல்லாம் முடித்து விடுங்கள்.

- Advertisement -

மாலை, மீண்டும் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலைக்கு மேல் பச்சை நிற பேனாவில் ‘ஓம் தனவ சங்கரி வர்ஷய வர்ஷய ஸ்வாஹா!’ என்ற இந்த ஒரு மந்திரத்தை எழுதி பூஜையறையில் மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் வராகி அன்னையின் திருவுருவப்படம் இருந்தால் அந்த வாராஹி அன்னையின் பாதங்களில் இந்த வெற்றிலையை வைக்கலாம்.

வீட்டில் பண வசியம் ஏற்பட வேண்டும். அஷ்ட ஐஸ்வரியமும் நிலைத்திருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த வெற்றிலையை எடுத்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். இந்த வெற்றிலையில் எழுதி இருக்கும் மந்திரம் உங்களுக்கு பண வசியத்தை கொடுக்கும். கடன் பிரச்சனையை படிப்படியாக குறைத்து விடும். வெற்றிலை வாடிய பிறகு எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.

இதையும் படிக்கலாமே: புதன்கிழமையில் விநாயகருக்கு இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் அதிகரித்து பெரிய தொழிலதிபர் ஆகக்கூடிய யோகத்தை பெறலாம்.

இந்த பிரபஞ்சத்தில் நாளைய தினம் பேராற்றல் நிறைந்திருக்கும். இறைசக்தி, முன்னோர்களின் ஆசிர்வாதம், அந்த அம்மனின் அருள் ஆசி எல்லாம் சேர்ந்து நீங்கள் வைக்கும் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும். பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் நாளை மேல் சொன்ன ஆன்மீகம் விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -