இன்று ஆடி மாதம் கடைசி ஞாயிறு, வளர்பிறை அஷ்டமியும் கூட! இன்று இரவு 1 கட்டி கற்பூரத்தை இப்படி ஏற்றினால், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாமல் காணாமலே போய்விடும்.

amman
- Advertisement -

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போவதற்கு கஷ்டப்பட்டு நிறைய பரிகாரங்களை செய்வதைவிட, சக்திவாய்ந்த சில நாட்களில் சில சுலபமான சிறிய பரிகாரங்களை செய்தாலே போதும். அந்த வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை. அதிலும் ஆடி மாதம் வந்திருக்கக்கூடிய கடைசி ஞாயிற்றுக்கிழமை. இந்த ஞாயிற்றுக்கிழமையை இன்னும் சிறப்பாக்க வளர்பிறை அஷ்டமியும் சேர்ந்து வந்திருக்கின்றது. இந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். இதே நாளில் அம்மனையும் வழிபாடு செய்யலாம். இதேநாளில் வாராகி தாயையும் வழிபாடு செய்யலாம். அப்போது இது எவ்வளவு சிறப்புமிக்க நாள் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

kamatchi-amman9

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை கண் திருஷ்டியை போக்குவதற்கு உகந்த நாள் என்றும் சொல்லுவார்கள். நம் உடம்பில் இருக்கக்கூடிய கண் திருஷ்டியோடு சேர்த்து, நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் போக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு தேவை ஒரே ஒரு கட்டி கற்பூரம். சிறிய அளவில் இருக்கும் மெழுகு கற்பூரத்தை எல்லாம் எடுத்துக் கொள்ளாதீர்கள். பெரிய அளவில் இருக்கும் ஒரு கட்டி கற்பூரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கற்பூரத்தை வலது கையில் வைத்துக் கொண்டு உங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர்த்தி வைத்து அந்த கற்பூரத்தை எல்லோருடைய தலையையும் சேர்த்து வலது பக்கம் மூன்று முறை, இடது பக்கம் மூன்று முறை, சுற்றி விடுங்கள். யார் கையில் இந்த கட்டி கற்பூரத்தை வைத்திருக்கிறீர்களா, அவர்களுடைய தலையையும் மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். (வீட்டில் மூத்தவர்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.)

sudam1

உங்கள் வீட்டிற்கு வெளியே செல்லுங்கள். அந்த கட்டி கற்பூரத்தை வீதியில் வைத்து எரிக்க முடிந்தால் எரித்துவிடலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் நிலை வாசல்படிக்கு வெளியில் வைத்து இந்த கட்டி கற்பூரத்தை ஏற்றவேண்டும். மனதார பைரவரையும், குலதெய்வத்தையும், வாராஹி தேவியும் நனைத்து கட்டி கற்பூரத்தில் நெருப்பு வைக்க வேண்டும். இந்த கற்பூரம் எரிந்து கரைந்து காணாமல் போவது போல,  உங்களை பிடித்த கண்திருஷ்டி, கஷ்டம், கடன் அனைத்துமே கண்ணுக்குத் தெரியாமல், காணாமல் போய்விட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவு 8 மணிக்கு மேல் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். இரவு 8 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். நடுஜாமத்தில் எந்த பரிகாரத்தையும் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

sudam

இந்த பரிகாரத்தில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. கண் திருஷ்டியும் உங்களை பிடித்த துன்பமும் கடன் தொல்லையும் நெருப்பில் போட்டு எரிக்க போகிறீர்கள் அவ்வளவு தான். திருஷ்டி கழிப்பது போல தான். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் இன்றிரவு எரிக்கக்கூடிய அந்த கற்பூரத்துடன் காணாமல் போக வேண்டும் என்று அந்த பைரவரை மனதார வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -