நாளை ஆடி கடைசி ஞாயிறு! துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று இந்த 1 வரி மந்திரத்தை சொன்னால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டமும், துன்பமும், துயரமும் வெளியே துரத்தி அடிக்கப்படும்.

durgai-amman
- Advertisement -

நாம் எல்லோருக்கும் தெரியும். நாளைய தினம் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்று. ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், ஆடி ஞாயிறு, இந்த மூன்று நாட்களுமே அம்மனுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதிலும் நாளைய தினம் துர்க்கை அம்மனை நினைத்து இந்த ஒரு வழிபாட்டை மட்டும் நீங்கள் செய்து விட்டால், உங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் அந்த துர்க்கா தேவி துவம்சம் செய்து விடுவாள். குடும்பத்தில் வறுமை, குடும்பத்தில் சண்டை சச்சரவு, குடும்பத்தில் சுபகாரிய தடை உள்ளவர்கள், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

அது மட்டும் இல்லாமல் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்று நாளைய தினம் துர்கை அம்மன் கோவிலுக்கு போய் வேண்டுதல் வைத்து இந்த மந்திரத்தை சொன்னாலும் உங்களுக்கு ஒரு நல்லது நடக்கும். இது தவிர குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

ஆடி ஞாயிறு துர்க்கை அம்மன் வழிபாடு:
அவரவர் வீட்டுன் அருகில் இருக்கும் அம்மன் கோவில்களில் நிச்சயமாக துர்க்கா தேவிக்கு தனியாக ஒரு சன்னிதானம் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனுக்கு உங்கள் நீங்கள் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் கைகளால் தாழம்பு குங்குமத்தை அர்ச்சகரிடம் கொடுத்து, அந்த குங்குமத்தைக் கொண்டு அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். அர்ச்சனை செய்த குங்குமத்தில் இருந்து கொஞ்சம் நீங்களும் பிரசாதமாக வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்து ஒரு டப்பாவில் போட்டு அதை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் துர்க்கை அம்பாலின் ஆசிர்வாதம் நமக்கு தினம் தினம் கிடைக்கும்.

துர்க்கை அம்மனுக்கு உங்கள் கைகளால் அரளி பூவை வாங்கி கட்டி எடுத்துச் செல்லுங்கள். இரண்டு மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். துர்க்கை அம்மனுக்கு நேர் எதிராக முட்டிக்கால் போட்டு வரங்களை கேட்க வேண்டும். மண்டியிட்டு வரங்கள் கேட்பது என்று சொல்லுவார்கள் அல்லவா. முட்டிக்கால் போட்டு இரண்டு கைகளையும் ஏந்தி உங்கள் பிரச்சனைகளை அம்பாளிடம் சொல்லி, வரங்களை கேட்க வேண்டும்.

- Advertisement -

இப்படி பிரார்த்தனை வைக்கும் போது ‘ஓம் தும் துர்காயை நமஹ!’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள். பிறகு அம்பாளை நமஸ்காரம் செய்து கொண்டு வீட்டிற்கு திரும்புங்கள். இந்த வழிபாட்டை நாளை நீங்கள் செய்தால், நீங்கள் என்ன நினைத்த துர்க்கை அம்பாலிடம் வேண்டுதல் வைத்தீர்களோ, அது ஒரு சில நாட்களில் பலிக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: நீங்கள் வாங்க நினைக்கும் தங்கத்தை விட பல மடங்கு அதிகமாக தங்கம் வாங்க ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்து விடுங்கள். தங்கம் மடமடவென்று குவிய தொடங்கி விடும்.

நாளைய தினம் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். இதை தவிர விடாதீங்க. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை இருக்கும் அல்லவா. அப்படிப்பட்டவர்கள் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த மந்திரத்தை மட்டும் துர்க்கை அம்பாளை நினைத்து சொல்லலாம் எந்த தவறும் கிடையாது. நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து விட்டு அசைவம் சாப்பிடலாமா, சாப்பிட கூடாதா என்ற சந்தேகமே வேண்டாம். இறை வழிபாடு செய்யும்போது அசைவ சாப்பாட்டை தவிர்ப்பது தான் நல்லது. மேல் சொன்ன பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலனடையலாம் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -