உங்கள் வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருக ஆடிப்பெருக்கு 2/8/2020 அன்று வீட்டில் எப்படி எளிமையாக வழிபாடு செய்ய வேண்டும்?

aadi-peruku2
- Advertisement -

ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு இனிய நாளாக இருக்கிறது. காவிரி ஆற்றை சிறப்பிக்கும் வகையில் தொன்று தொட்டு இந்த விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. சிதம்பரத்தில் இருக்கும் காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு நன்னாளில் அம்மா மண்டபம் படித்துறையில் பெருமாளுக்கு சீதனம் அளிப்பதற்காக பட்டுச்சேலை, தாலிக்கயிறு, இதர மங்கல பொருட்கள் அனைத்தும் சேர்த்து ஆற்றில் விடுவது வழக்கம். இந்த பதிவின் மூலம் நாம் ஆடிப் பெருக்கின் சிறப்பையும், தற்போதைய சூழலில் வீட்டிலேயே எப்படி வழிபடுவது என்பதைப் பற்றியும் காண இருக்கின்றோம்.

aadi-peruku

ஆடி மாதம் என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி பதினெட்டாம் நாள் கோவில்களுக்கு சென்று நதிக்கரைகளில் நீராடி, காப்பரிசி தயார் செய்து தெய்வங்களுக்கு படைத்து, பலவித கலவை சாதங்களை உற்றார் உறவினர்களுடன் நதிக்கரையில் அமர்ந்து சாப்பிட்டு, விவசாயம் செழிப்பதற்கு வேண்டிக் கொள்வது இந்த நாளின் சிறப்பான அம்சமாகும்.

- Advertisement -

மாங்கல்ய பலம் நீடிக்கவும், புதிதாக விதை விதைப்பதால் விவசாயம் செழித்து தை மாதத்தில் நல்லபடியாக அறுவடை செய்யவும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வந்தனர். இன்றைய நாளில் எதை நாம் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பார்கள். இந்த நாளில் தங்கம், வெள்ளி என்று நகை வகைகளை பெருகுவதற்கு வாங்கி குவிப்பார்கள். ஆனால் இப்போது அதை செய்ய முடியாத காரணத்தினால் நம்மால் முடிந்தவற்றை வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் வறுமை ஏற்படாமல் இருப்பதற்கு அரிசி, பருப்பு, கல் உப்பு, மஞ்சள், சர்க்கரை முதலியவற்றை இந்த நாளில் வாங்கலாம். இதனால் நம் வீட்டில் என்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாமல் உணவு தானியங்கள் பல்கிப்பெருகி சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.

kaveri-river

அந்தக் காலத்தைப் போல் இந்த காலத்தில் ஆறுகளில் தண்ணீர் இல்லாததால் காவிரி போன்ற முக்கிய நதிகளில் அணைகளை திறந்துவிட்டு இந்த நாளில் மட்டும் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழலில் அதைக் கூட செய்ய முடியாத காரணத்தினால் வீட்டில் எப்படி எளிமையாக கொண்டாட முடியும்? என்பதை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஆடி பதினெட்டாம் நாள் தாலிக்கயிறு மாற்றுவதற்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்பட்டு வருகிறது. புதிதாக தாலி கயிறு மாற்ற விரும்புபவர்கள் இந்த நாளில் மாற்றிக் கொள்வது மாங்கல்ய பலத்தை தரும். பூஜை அறையை சுத்தம் செய்து வாழை இலை விரித்து அதில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், முதலிய மங்கள பொருட்களை வைத்து, காப்பரிசி படையலிட்டு, பழவகைகள் படைக்க வேண்டும். நாவல் பழம் கிடைத்தால் இன்னும் சிறப்பு. புதிய கயிறு மாற்றுபவர்கள் அந்த கயிறை இலையில் வைத்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.

aadi-peruku1

இவை காவேரி தாயின் முன் செய்வது மிகவும் சிறப்பானது. ஆனால் வீட்டிலேயே செய்வதால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் இரண்டு மூன்று துளசி இலைகள், ஏலக்காய், பச்சை கற்பூரம், மஞ்சள் பொடி கலந்து காவேரி தாயாக பாவித்து வழிபடலாம். அல்லது வீட்டில் கிணறு இருக்கின்றவர்கள் கிணற்றுக்கு பக்கத்தில் கிழக்கு பார்த்து அமர்ந்து இந்த பூஜையை செய்யலாம். அன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு கலவை சாதத்தை தயார் செய்து நைய்வேத்யம் வைக்கலாம்.

- Advertisement -

kapparisi

புதிய கயிறு மாற்ற விரும்பாதவர்கள் வேறொரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு நீங்கள் அணிந்திருக்கும் தாலி சரடை தண்ணீரில் கழுவி, மஞ்சள் குங்குமம் இட்டு காவிரி தாயாக பாவித்து தீர்த்தத்தை தெளித்து இலையில் வைத்து வழிபடலாம். ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி கொள்ளுங்கள். பின்னர் நெய் அகல் தீபம் ஒன்றை இலையில் வைத்து ஏற்ற வேண்டும். பின் தூப தீபம் காண்பித்து கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் குடும்ப நன்மைக்காக வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு கணவர் கையால் தாலி சரடை மாட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலவை சாதத்தையும், காப்பரிசி பிரசாதத்தையும் உண்ண வேண்டும். ஆடி பதினெட்டாம் நாள் வழிபாட்டை செய்பவர்களுக்கு தங்குதடையின்றி வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீங்களும் இந்த வழிபாட்டை செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
எப்போதெல்லாம் மாவிளக்கு போட வேண்டும்? எப்படி போட வேண்டும்? மாவிளக்கு போடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -