கண்ணன்-என் காதலன் :
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ண னழகு முழிதில்லை;
நண்ணு முகவடிவு கானில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.
ஒய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -அந்த
மாயன் புகழினை யெப்போதும் .
கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே- ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வைய முழுதுமில்லை தோழி
கண்ணன் முகமறந்து போனால் -இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி
வாழும் வழியென்னடி தோழி
இதையும் படிக்கலாமே:
வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே – பாரதியார் கவிதை
இது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.
Englsih Overview:
Here we have “Aasai mugam marandhu poche lyrics in Tamil” from Bharathiyar kavithai. This poem comes under the title Kannan en kadhal.