ஆசைகள் நிறைவேற சுக்கிர தீப வழிபாடு

lakshmi deepam
- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் திசை என்பது 20 வருடங்கள் நடைபெறும். அனைவருக்கும் சுக்கிர திசை நடக்கும் பொழுது அவர்களின் வாழ்க்கை மாறாது. ஒரு சிலருக்கு மட்டுமே மாறும் என்று ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. இவ்வாறு மாறாமல் இருப்பதற்கு காரணம் ஏதேனும் தோஷங்களாக இருக்கும். அப்படி தோஷங்களால் சுக்கிர பகவானுக்குரிய யோகத்தை நம்மால் பெற முடியாமல் நாம் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்றாலோ, பணத்தேவைகள் பூர்த்தி அடையாமல் இருக்கிறது என்றாலோ, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்து கொண்டு இருக்கிறது என்றாலோ சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம். அப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு நாம் ஏற்ற வேண்டிய ஒரு எளிமையான தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவக்கிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகளும் பலன்களும் இருக்கின்றன. அந்த கிரகங்களை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு நன்மைகள் உண்டாகும். அவர்களால் ஏற்பட்ட தாக்கங்கள் குறையும் என்று கூறப்படுகிறது. இதில் செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் ஆடம்பர வசதிக்கு அதிபதியாக திகழக்கூடியவராக இருப்பவர் சுக்கிர பகவானே, சுக்கிர பகவானின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அவருடைய வாழ்க்கை மிகவும் அற்புதமான அமைதியான நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையாக மாறும். அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பெறச் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சுக்கிர பகவானுக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் சுக்கிர பகவானுக்குரிய நேரமான சுக்கிர ஹோரில்தான் செய்ய வேண்டும். பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை என்பது காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளும் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் வரும். இதில் காலை 6 மணியில் இருந்து 7 மணி என்பது தான் மிகவும் உகந்த நேரம்.

இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் நமக்கு ஒரு மகாலட்சுமி தாயாரின் படம் என்பது வேண்டும். நம் வீட்டிலேயே மகாலட்சுமி தாயாரின் படம் இருக்கிறது. என்று நினைப்பீர்கள். இதில் என்ன குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் அந்த மகாலட்சுமி தாயார் அணிந்திருக்கும் புடவையின் நிறம் பச்சை நிறமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுக்கிர பகவானின் அருளை நம்மால் எளிதில் தர முடியும். மற்ற நிறங்களில் இருக்கக்கூடிய மகாலட்சுமியை விட பச்சை நிற ஆடை அணிந்த மகாலஷ்மிக்கு சக்திகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி பச்சை நிறம் புடவை உடுத்திய மகாலட்சுமி தாயாரின் படத்தை வாங்கி சுத்தம் செய்து அவளுக்கு வாசனை மிகுந்த சந்தனம் குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக புதிதாக ஒரு அகல் விளக்கை வாங்கி அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது சுக்கிரனுடைய திசையான வடக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும்.

பிறகு இந்த தீபத்தில் ஒரு சிட்டிகை அளவு பச்சை கற்பூரம், ஒரு ஏலக்காயின் விதைகளை போட வேண்டும். அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த கற்கண்டு மற்றும் மாதுளம் பழன்களை வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் சுக்கிர ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த வாரம் ஏற்றிய அதே அகல் விளக்கை அடுத்த வாரம் உபயோகப்படுத்த கூடாது. புதிதாக அகல் விளக்கை வாங்கி தான் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே வீட்டில் செல்வ வளம் பெருக

இந்த முறையில் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை பெற முடியும்.

- Advertisement -