அடகு நகையை மீட்க மந்திரம்

sorna agarsana bhairavar gold
- Advertisement -

தங்க நகை வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் பல பேருக்கு வாங்கிய நகையை அனுபவிக்கும் யோகமே இருக்காது நகையே வாங்க முடியாததே ஒரு பெரிய துன்பம் என்றால் வாங்கிய நகையை அணிய முடியாமல் எப்பொழுதும் அடகு கடையில் வைத்து விட்டு அணிவதற்கான சூழ்நிலையே இல்லாமல் போவது அதைவிட பெரிய கொடுமை.

இத்தகைய சூழ்நிலையை இன்று பெரும்பாலான சந்தித்துக் கொண்டு தான் இருப்பார்கள். நகை அடகு வைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது தொழில் விருத்தி அல்லது படிப்பு போன்றவையாக இருக்கலாம். இன்னும் சிலரோ பாடுபட்டு நகையை திருப்பி விடுவார்கள் ஆனாலும் மறுபடியும் அது அடகு கிடைக்க சென்று விடும்.

- Advertisement -

எப்படி இருந்தாலும் அடகு நகையை மீட்டு நாம் அணிந்து அழகு பார்க்க வேண்டும் அல்லவா. அது முடியாத பட்சத்தில் நகை இருந்தும் வீண் தானே. இந்த வழிபாட்டை செய்யும் போது அடகு கடையில் இருந்து நகை விரைவில் நம் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

அடகு நகை மீட்க பரிகாரம்

பைரவர்களின் 8 அவதாரங்கள் உண்டு. அதில் ஒவ்வொரு பைரவரும் ஒவ்வொரு விதமான சக்தி படைத்தவர்கள். அந்த வகையில் சொன்ன ஆகர்ஷண பைரவரை நாம் தொடர்ந்து வழிபடும் போது தங்கம் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தங்கம் வீட்டில் நிலைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போன்று இந்த சொன்ன ஆகர்ஷண பைரவரை வணங்கும் போது அகில் இருக்கக்கூடிய தங்க நகையும் நம் வீட்டிற்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது அதற்கான ஒரு சிறிய வழிபாட்டு முறையும் மந்திரமும் உள்ளது அதை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த வழிபாட்டை வீட்டிலிருந்து செய்யலாம் இதற்கு சொர்ண ஆகர்சன பைரவரின் திருவுருவப்படம் ஒன்று கட்டாயமாக வேண்டும். பலருக்கு இந்த படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா என்ற சந்தேகம் இருக்கும். சொர்ண ஆகர்சன பைரவர் கட்டாயமாக வீட்டில் வைத்து வணங்க வேண்டிய ஒருவர் தான். ஆகையால் தாராளமாக வீட்டில் வைத்து வணங்கலாம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு சொர்ன ஆகஷசன பைரவர் படத்தை துடைத்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து நல்ல மனம் மிக்க மலரை சூட்டி விடுங்கள். அதன் பிறகு ஒரு புதிய அகலை வாங்கி சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து சுத்தமான நெய் ஊற்றி இரட்டை பஞ்சத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தின் முன் அமர்ந்து உங்களுடைய தங்க நகைகள் விரைவில் வீடு வந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அப்படி வேண்டும் வேளையில் உங்கள் நகைகள் எது எது அடைகில் உள்ளதோ அதையெல்லாம் உங்கள் மனக்கண் முன்பாக கொண்டு வாருங்கள். அவையெல்லாம் உங்கள் வீட்டிற்கு வந்து விட்டதாக பாவனை செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு ஓம் சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்லுங்கள்.

இந்த வழிபாட்டை முழு மனதுடன் மனதார செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல 48 நாட்கள் இந்த சொர்ண ஆகர்சன பைரவரை நினைத்து இந்த மந்திரத்தையும் தீபத்தையும் ஏற்றி வழிபடும் போது அடகில் இருக்கும் உங்கள் நகை நிச்சயம் வீடு வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர பரிகாரம்

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -