பணப் பிரச்சனை தீர பரிகாரம்

cash kollu
- Advertisement -

இன்று மனிதனுக்கு இருக்கக் கூடிய பலவிதமான பிரச்சனைகளில் முதல் பிரச்சனை முதலாயப் பிரச்சனை பணம் தான். பணம் மட்டும் ஒருவருக்கு தாராளமாக கையில் இருந்தால் பலவிதமான பிரச்சனைகளிலிருந்து எளிமையாக வெளி வந்து விடலாம். ஏன் பிரச்சனையை கூட இருக்காது என்றும் சொல்லலாம்.

அந்த அளவிற்கு பணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகி விட்டது. ஆனால் அந்தப் பணம் நம் கைக்கு வருவதற்குள் படாத பாடு பட வேண்டியதாக இருக்கிறது. சில நேரங்களில் வேலை செய்த இடத்திலிருந்து பணம் வராது. நமக்கு தர வேண்டியவர்கள் தர மாட்டார்கள்.

- Advertisement -

ஏதோ ஒரு வகையில் நமக்கு வர வேண்டிய பணம் வராமல் தட்டிக் கொண்டே செல்லும். ஏன் ஒரு சிலருக்கு கடன் கூட நினைத்த நேரத்தில் கிடைக்காது. இப்படியான பணத்தடை நீங்க ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணத்தடை நீங்க பரிகாரம்

பணத்தடை நீங்க எண்ணற்ற பரிகாரங்கள் வழிபாடுகள் பூஜைகள் இருந்தாலும் இது மிகவும் எளிமையானதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்படியான இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது தான் உகந்தது. இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு அருகில் உள்ள கடையில் சிறிதளவு கொள்ளு வாங்கி வந்து விடுங்கள். அந்த கொள்ளை ஒரு சிகப்பு நிற துணியில் மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதை வைக்கும் போது உங்களுடைய பணத்தடை நீங்க வேண்டும் என்று குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் இந்த சிகப்பு கொள்ளும் முட்டையை எடுத்து உங்களை சுற்றி போட வேண்டும். இதை வைத்து வீட்டில் உள்ள அனைவரையும் வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றுங்கள். அதன் பிறகு இந்த மூட்டையை கொண்டு சென்று கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவம் சாப்பிடும் போது இந்த பரிகாரத்தை செய்யலாமா என்ற சந்தேகம் எழும். அசைவம் சமைப்பதாக இருந்தால் பூஜை அறையில் வைத்து வணங்கிய கொள்ளு மூட்டையை நீங்கள் அசைவம் உண்பதற்கு முன்பாகவே பூஜை அறையில் இருந்து எடுத்து வெளியில் வைத்து விடுங்கள். அதன் பிறகு மாலையில் எடுத்து சுற்றி போடலாம்.

இந்த பரிகாரம் உங்களுடைய எதிர்மறை ஆற்றல்கள் கண் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றை நீக்கி விடும். இத்துடன் பணத்தடையை நீக்கி பணவரவை அதிகரிக்கும். இந்தக் கொள்ளு கேது பகவானுக்குரிய தானியமாகவும் கருதப்படுகிறது. பணத்தடைக்கு முக்கிய காரணமாக கேது கிரகம் கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பம் நீங்க சிவன் வழிபாடு

இந்த பரிகாரத்தின் மூலம் அத்தகைய தோஷமும் நீங்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருக்கு நம்பிக்கையுடன் செய்து நல்ல பணவரவை பெறலாம்.

- Advertisement -