ஆசைப்பட்டு வாங்கிய நகைகள் எல்லாம் அடகில் மூழ்கி விடுமோ என்ற கவலை இனி வேண்டாம். அடகு நகைகள் விரைவில் மீட்க கை மேல் பலன் தரக் கூடிய அற்புதமான பரிகாரம்.

jwelle
- Advertisement -

நகையை அடகு வைப்பது எப்போதுமே மனதை கலங்கடித்து விடும். பணம் போதா குறைக்கு நகையை அடகு வைத்தாலும் சரி, வீடு, படிப்பு, திருமணம் போன்ற சுப செலவுகளுக்காக நகை அடமானம் வைத்தாலும் சரி நகையானது நம் கையை விட்டு நழுவி செல்லும் போது எப்பேர்பட்ட வசதி படைத்தவர்களாக இருந்தாலும் கூட சற்று கலங்கத் தான் செய்வார்கள்.

இப்படி ஆசைப்பட்டு வாங்கிய நகைகளை ஏதோ ஒரு சூழ்நிலைக்காக அடமானம் வைத்து விடுவோம். நகையை அடகு வைக்கும் போது அதை திருப்புவதற்கான வழிகள் இருக்கும். ஆனால் அடகு வைத்த பிறகு அதை திருப்ப முடியாத அளவுக்கு நம்முடைய சூழ்நிலைகள் மோசமாக மாறி விடும். இப்படியான சூழ்நிலையில் அடகில் இருந்து திருப்ப முடியாமல் துன்பப்படுபவர்கள். இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் போது விரைவிலே அவர்கள் நகையை திருப்புவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அடகில் இருக்கும் தங்க நகையை மீட்க பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் முக்கியமான பொருள் கல் உப்பு தான். கல் உப்பு வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே திகழ்கிறது. இப்போதும் அந்த உப்பை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறோம்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு சுத்தமான சில்வர் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பை கொட்டி பரப்பி விடுங்கள். அந்த உப்பிற்கு மேல் நீங்கள் அடகு வைத்த நகைகளின் விவரங்களை எழுதி கொள்ளுங்கள். அந்த பேப்பரில் கடைசியாக இந்த நகைகளை எல்லாம் நான் திருப்பி விட்டேன் என்ற ஒரு வார்த்தையும் சேர்த்து எழுதி விடுங்கள். இப்போது உப்பின் மீது இந்த பேப்பரை வைத்து அதன் மேல் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து விடுங்கள். அத்துடன் கொஞ்சம் மிளகையும் அந்த பேப்பரின் மீது தூவி விடுங்கள்.

- Advertisement -

இதையெல்லாம் செய்த பிறகு உங்கள் வீட்டின் பூஜை அறையில் இந்த உப்பு தட்டை கொண்டு வைத்து விடுங்கள். தினமும் வீட்டில் பூஜை செய்யும் போது தீபாராதனை காட்டுவோம் அல்லவா அப்போது இந்த தட்டிற்கும் தீபாராதனை காட்டி விடுங்கள். இதை நீங்கள் அடிக்கடி மற்ற வேண்டிய அவசியம் கிடையாது.

உப்பை சாதாரணமாக ஒரு கிண்ணத்தில் கொட்டி நாம் வீட்டின் வரவேற்பறையில் வைத்தாலே பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தி நமக்கு கிடைக்கும். அத்துடன் இந்த எலுமிச்சை பழம், மிளகு நாம் எழுதி வைத்திருக்கும் பேப்பர் இவையெல்லாம் செய்து ஒரு அற்புதமான பலனை கொடுத்து, உங்கள் நகையை விரைவில் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே: ஒரே ஒரு ரூபாய் நோட்டில், இந்த 3 பொருட்களை வைத்து மடித்து விட்டால், 3 மடங்கு பணவரவு உங்களுக்கு அதிகரிக்கும்.

இந்த பரிகாரத்துடன் நீங்கள் நகையை மீட்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயம் உங்கள் முயற்சியைகளுக்கு இந்த பரிகாரம் பெறும் உதவியாக இருந்து நீங்கள் ஆசைப்பட்டு வாங்கிய நகைகள் மீண்டும் உங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்யுங்கள். ஏனென்றால் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு நம்பிக்கை மிகவும் அவசியம் என்ற இந்த கருத்தோடு பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -