அடமானத்தில் இருக்கும் தங்க நகைகள் வீடு திரும்ப பரிகாரம்

jewel amount
- Advertisement -

பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் கண்டிப்பான முறையில் எப்படியாவது நகைகளை வாங்க வேண்டும். அதை போட்டு அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இந்த ஆசை இல்லாத பெண்கள் என்பவர்கள் இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட பெண்கள் தங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை மிச்சம் செய்து சேர்த்து வைத்து அதை கொண்டு நகைகளை வாங்குவார்கள். அப்படி வாங்க கூடிய நகைகளை அடமானம் வைப்பதற்குரிய சூழ்நிலை ஏற்படும் பொழுது அதை சிறிதும் தயக்கம் இன்றி அடமானத்திற்கு கொடுக்கவும் செய்வார்கள். அப்படி கொடுத்த நகைகளை திருப்புவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்கத்தை நாம் ஸ்வர்ணம் என்று கூட சொல்லலாம். ஸ்வர்ணலட்சுமியின் அருள் நமக்கு இருந்தால் தான் தங்கம் சேரும் என்றும் கூறப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு மற்றும் சனியின் தாக்கம் இருந்தால் அவர்களிடம் இருக்கக்கூடிய நகை அடமானத்திற்கு செல்வதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தாயாரின் அருள் பெறுபவர்கள் கண்டிப்பான முறையில் அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை திருப்ப முடியும் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கும் அடகில் வைத்த நகையை திருப்புவதற்கும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை புதன், வியாழன், வெள்ளி இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமை செய்யலாம். மேலும் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். இதற்கு ஒரு சுத்தமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அந்த தண்ணீரில் சிறிது பன்னீரை ஊற்றி, அதனுடன் மல்லிகைப்பூ அல்லது முல்லைப் பூக்களை உதிரியாக வாங்கி போட வேண்டும்.

மேலும் அதனுடன் ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களையும் போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் சுதர்சனாய நமஹ” என்னும் மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து “தங்க நகைகள் வீடு திரும்ப வேண்டும். அதிக அளவில் பண வரவு ஏற்பட வேண்டும்” என்று நேர்மறையான வேண்டுதல்களை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வேண்டுதல்களை வைத்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பிறகு நாம் பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டு பணமும் நகையும் எந்தெந்த இடங்களில் இருக்கிறதோ அந்த இடங்களிலும் இந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த இடத்தில் இருக்க கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் வருமானம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அடமானத்தில் நாம் வைத்த நகையை நம்மால் திருப்ப முடியும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய பூஜை

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை வாரத்திற்கு ஒருமுறை என்ற வேதம் தொடர்ச்சியாக செய்து வர விரைவிலேயே அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளை நம்மால் திருப்ப முடியும்.

- Advertisement -