ஆடி அமாவாசை தினமான இன்று எல்லோர் வாயில் இருந்தும் இந்த மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும். உங்களுக்கு இருக்கக்கூடிய பித்ரு சாபம் நீங்கி, முன்னோர்களின் ஆசி கிடைக்க 2 எழுத்து மந்திரம்.

hanuman2
- Advertisement -

இன்றைய தினம் ஆடி அமாவாசை. கட்டாயமாக எல்லோர் வீட்டிலும் முன்னோர் வழிபாடு இருக்கும். இந்த முன்னோர் வழிபாட்டை இன்று மதியம் சிறப்பாக முடித்துவிட்டு, திதி தர்ப்பண காரியங்களை எல்லாம் சிறப்பாக நிறைவு செய்துவிட்டு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இன்று பார்க்கப் போகின்றோம். நிறைய பேருக்கு பித்ரு சாபத்தால் பிரச்சனை. முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கவில்லை, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இல்லை, குழந்தை பாக்கியம் இல்லை, திருமணம் நடக்கவில்லை என்று பெரிய பிரச்சினைகள் இருக்கிறது.

இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் எளிமையான தீர்வு காண இந்த நாளை யாரும் தவற விடாதிங்க. இன்றைய நாள் நீங்கள் சொல்ல வேண்டிய இரண்டு வரி மந்திரம் என்ன, இதோடு சேர்த்து அமாவாசை தினமான இன்று செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான வேலை இருக்கிறது அது என்ன வேலை, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

ஆடி அமாவாசை சொல்ல வேண்டிய மந்திரம்:
இன்று நாம் பார்க்கப் போவது ஹனுமன் வழிபாட்டை பற்றி தான். உங்களுக்கு இது கொஞ்சம் புதுசாக இருக்கும். அமாவாசை தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்யலாம். அம்பாள் வழிபாடு செய்யலாம். முன்னோர்களின் வழிபாடு செய்யலாம். அனுமனை வழிபாடு செய்வதா, என்று குழப்பம் இருக்கலாம். இந்த அமாவாசை தினத்தில் அனுமனையும் வழிபாடு செய்யலாம். எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் அதை துவம்சம் செய்யக்கூடிய வலிமைமிக்க ஆஜானபாகுவான கடவுள் ஹனுமன்.

இன்று மாலை முடிந்தால் ஹனுமன் கோவிலுக்கு சென்று ‘ராம ராம’ மந்திரத்தை சொல்லலாம். ராம மந்திரத்தின் வலிமை என்ன என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். அதிலும் இன்றைய தினம் அனுமனை நினைத்து இந்த ராம மந்திரத்தை உச்சரித்தால் உங்கள் குடும்பத்திற்கு இருக்கக்கூடிய முன்னோர்களின் சாபம் விலகும். இந்த ராம நாமத்தை உச்சரித்தீர்கள் என்றால் குடும்பத்தில் இருப்பவர்களுடைய தோஷங்கள் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

முடிந்தால் ஆஞ்சநேயர் சன்னிதானம் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை சொல்லலாம். அப்படி இல்லையா இன்று மாலை பூஜையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அந்த அனுமனை மனதார நினைத்து ராம மந்திரத்தை உச்சரியுங்கள். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ ஒரு நோட்டு புத்தகத்தில் 108 முறை எழுதுங்கள்.

உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை வையுங்கள். நிச்சயமாக துயரங்களிலிருந்து வெளிவருவதற்கு அந்த ஹனுமன் உங்களுக்கு துணையாக நிற்பார். மனவலிமையையும் கொடுப்பார். அதேபோலத்தான் இன்றைய தினம் முடிவதற்குள் உங்கள் கைகளால் அன்னதானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திங்கட்கிழமைகளில் ஒரு துண்டு படிகாரத்தை கையில் வைத்து கொண்டு இதை செய்தால், வேலையை தேடி நீங்கள் அலைய வேண்டாம் வேலை உங்களை தேடி வரும்.

அமாவாசை அன்று தவறாமல் செய்ய வேண்டிய தானம்:
யாருக்கு வேண்டும் என்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் அந்த அன்னதானத்தை செய்யலாம். ஒரு பிரட் பாக்கெட் வாங்கி உண்மையாக பசியோடு இருக்கும் ஏழைக்கு தானமாக கொடுத்தால் கூட அதன் மூலம் உங்களுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும். ராம நாமத்தோடு இன்று செய்யக்கூடிய அன்னதானம் உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்களையும் துயரங்களையும் போக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -