திங்கட்கிழமைகளில் ஒரு துண்டு படிகாரத்தை கையில் வைத்து கொண்டு இதை செய்தால், வேலையை தேடி நீங்கள் அலைய வேண்டாம் வேலை உங்களை தேடி வரும்.

job padikaram
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பலர் படித்து முடித்த பிறகு படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். ஒரு சிலர் வேறு வழி இல்லாமல் கிடைத்த வேலையில் சேர்ந்து விருப்பமில்லாமல் ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். ஒரு சிலர் விருப்பமான வேலை கிடைக்கும் வரை காத்திருக்கவும் செய்கிறார்கள். இது அவரவர் சூழ்நிலையை பொறுத்து அமைகிறது. நீங்கள் நினைத்த வேலை உங்களை தேடி வர இந்த ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்வது என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வேலை வாய்ப்பை பொறுத்த வரையில் முதலில் வேலைக்கான தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எந்த வேலை வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த வேலைக்கான ஆற்றலுடன் இருப்பது மிகவும் முக்கியம். இவற்றுடன் இந்த எளிய தாந்த்ரீக பரிகாரத்தை செய்யும் பொழுது உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் விரைவில் கை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -

விரும்பிய வேலை கிடைக்க பரிகாரம்
இந்த பரிகாரம் செய்வதற்கு திங்கட்கிழமை தான் உகந்த நாள். திங்கட்கிழமை காலை முதல் மாலை 6 மணி வரை எப்பொழுது வேண்டுமானாலும் இதை செய்யலாம். இதை ஆறு மணிக்கு மேல் செய்யக் கூடாது. அதாவது இருட்டிய பிறகு இந்த பரிகாரத்தை செய்யக் கூடாது.

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய துண்டு படிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மண் சட்டியில் போட்டு சூடு படுத்திய பிறகு அடுப்பை அணைத்து விட்டு படிகாரத்தை அப்படியே ஆற விடுங்கள். படிகாரம் நன்றாக ஆறிய பிறகு அதை உங்கள் வலது கையில் வைத்து வலது புறமாக ஆறு சுற்று சுற்ற வேண்டும். அதன் பிறகு நீங்கள் எதுவும் பேசாமல் வீட்டிற்கு வெளியே சென்று கழிவு நீர் ஓடும் கால்வாயில் போட வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு எதுவும் பேசாமல் மறுபடியும் வீட்டிற்குள் வந்து கை கால் முகம் அலம்பி கொண்டு உள்ளே சென்று விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம் இந்த பரிகாரம் செய்ய நீங்கள் பரிகாரத்தை சட்டியில் சேர்த்து சூடுபடுத்த தொடங்கியது முதல் கால்வாயில் போட்டு வீட்டிற்குள் நுழையும் வரை யாரிடமும் எதுவும் பேசக் கூடாது. இது மட்டும் தான் இந்த பரிகாரத்தில் முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டியது.

இதையும் படிக்கலாமே: நீங்கள் நினைத்த வேலை நினைத்தபடி கட்டாயம் கிடைக்கும். அதுவும் கை நிறைய சம்பளத்துடன். இன்டர்வியூக்கு போகும்போது இதை மட்டும் உங்கள் மேல் தடவிக் கொண்டு செல்லுங்கள்.

எந்த ஒரு செயலையும் நாம் செய்ய என்ன தான் நல்ல முறையில் முயற்சி பயிற்சி அனைத்தையும் எடுத்தாலும் கூட நமக்கான எண்ணங்கள் எதிர்மறை ஆற்றல்கள் என்பது அதை தடுக்க தான் செய்யும். அந்த எதிர்மறை ஆற்றல் நமக்கு வரும் வாய்ப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டே செல்லும். அதையெல்லாம் சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரமாக தான் இதை பார்க்கப்படுகிறது. இந்த பரிகாரத்தை திங்கட்கிழமைகளில் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பிய வேலை நல்ல சம்பளத்துடன் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறலாம்.

- Advertisement -