வாழ்க்கையில் வரவிருக்கும் தோல்விகளை எல்லாம் வெற்றியாக மாற்ற ஒரு சூட்சம ஹனுமன் மந்திரம்! இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் என்றுமே வெற்றி கிட்டும்.

hanuman-anjaneyar
- Advertisement -

அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் வீரத்தையும், பலத்தையும் ஒருவர் சொல்லித்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு பிடித்த கடவுள் என்றால், அதில் முதலில் இருப்பது இந்த ஹனுமன் தான்.

ராமர், ராவணனை வீழ்த்தி போரில் வெற்றி பெற காரணமாக இருந்தவரே இந்த ஆஞ்சநேயர் தான். ஹனுமன் பலமும், மன உறுதியும், நமக்குள் வந்து விட்டால் வாழ்வில் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. ராமாயண போரில் ராவணன், ராமரை வீழ்த்துவதற்கு மறைமுகமாக சூழ்ச்சி செய்த போது, ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆக அவதாரம் எடுத்து ராவணனின் சூழ்ச்சிகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார்.

- Advertisement -

ராமருக்கு வரவிருக்கும் தோல்வியை தடுக்க, ஆஞ்சநேயர் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆக அவதாரம் எடுப்பதற்கும் முன், ஆஞ்சநேயரால் சொல்லப்பட்ட மந்திரம் தான் இந்த ஆஞ்சநேயர் மாலா மந்திரம். இந்த மந்திரத்தை சொன்னால் ஐந்து மடங்கு பலம் நமக்கு அதிகரிக்கும்.

தோல்விகளை எல்லாம் வெற்றியாக மாற்ற ஹனுமன் மந்திரம்
தோல்வி வெற்றி என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல. கடவுளாக இருந்து, மனிதர்களாக அவதாரம் எடுக்கப்பட்டவர்களுக்கும் இதே நிலைமைதான். மனிதனாக பிறந்து விட்டால் வெற்றி தோல்வி இரண்டையும் சந்தித்து தான் ஆக வேண்டும். இதுதான் உலக நியதி. நாம் சாதாரண மனிதர்கள் தானே. ஆகவே, வாழ்வில் வரும் வெற்றி தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பூஜையறையில் அமர்ந்தாலும் சரி, அல்லது வீட்டில் வேறு எந்த இடத்தில் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டாலும் சரி.

- Advertisement -

இந்த மந்திரத்தை பார்த்து 7 முறை உச்சரியங்கள். கோழையாக இருப்பவர்களும் மனது, தைரியத்தோடு மாறிடுவீங்க. வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே கண்டவர்கள் வெற்றியும் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து கிரக தோஷங்களும் நீங்கும். பீடை தரித்திரம் விலகும். பெயர் புகழ் ஆரோக்கியம் பலம் எல்லாம் உங்களை வந்து சேரும். இதோ உங்களுக்கான ஆஞ்சநேயர் மந்திரம்.

மந்திரம்:
ஓம் ராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய

- Advertisement -

கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய

சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய

ராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாய –ட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம

இதையும் படிக்கலாமே: கற்றாழையை வீட்டில் இப்படி வைத்தால், பீரோவில் கட்டு கட்டாக பணம் சேரும். மகாலட்சுமியின் பரிபூரணமான ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைத்துவிடும்.

இதோடு சேர்த்து உங்களுடைய வீட்டின் அருகில் ஹனுமன் சன்னிதானம் இருக்கக் கூடிய கோவிலுக்கு வியாழக்கிழமை, சனிக்கிழமை சென்று விளக்கு போட்டு வழிபாடு செய்தால், ஆஞ்சநேயரின் அனுகிரகம் முழுமையாக கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிட்டும். பிறகு வாழ்வில் உங்களுக்கு எப்போதும் ஏறு முகம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -