நினைத்த காரியம் நினைத்தபடி நடக்க, கம்பீரமாக நம்முடைய வாழ்க்கையை வாழ, இந்த ஒரு குச்சியை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தாலே போதும்.

arasa-ilai-vinayagar
- Advertisement -

வாழ்க்கையில் நீ எல்லாம் உருப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. உன் தகுதிக்கு ஒரு நல்ல வேலையும் கிடைக்காது. நல்ல சம்பாத்தியமும் இருக்காது. தறுதலையாக சுற்றி திரியும் உன்னால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது, என்று நிறைய பேரை நாம் திட்டுவோம். நம்மை யாராவது அப்படி திட்டினால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும். ஆகவே, இந்த வார்த்தைகளை சொல்லி அடுத்தவர்களை திட்டாதீங்க.

சில பேர் சோம்பேறித்தனமாக இருப்பதற்கும், கோழைத்தனமாக இருப்பதற்கும், வேலை வெட்டி இல்லாமல் இருப்பதற்கும், அவர்களுடைய சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கின்றது. சில பேருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும், அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். சில பேர் நிறைய முயற்சி செய்வார்கள். ஆனால், வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கும்.

- Advertisement -

உங்களுடைய வாழ்வில் இப்படி எந்த சங்கடங்கள் இருந்தாலும் சரி, நீங்கள் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்களுக்கும் தெளிவு கிடைக்கும். கம்பீரமாக உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் தலைநிமிர்ந்து வாழலாம். பரிகாரம் செய்ய ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். அரச வாழ்வை கொடுக்கும் அரச மர குச்சி பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

அரச வாழ்வை கொடுக்கும் அரசமர குச்சி வழிபாடு:
முதலில் அரசமரத்தடி விநாயகர் உங்கள் வீட்டின் அருகில் இருந்தால் விடவே விடாதீங்க. அவரது பாதங்களை பற்றி கொள்ளுங்கள். தினமும் உங்களுடைய பிரச்சனைகளை அவரிடம் சொல்லி, அந்த அரச மரத்தடி பிள்ளையாரை வலம் வந்தால், எவ்வளவு கஷ்டப்படுபவர்களாக நீங்கள் இருந்தாலும் உங்களுக்கு ஒரு சில நாட்களில் அரச வாழ்க்கை கிடைக்கும்.

- Advertisement -

அரச மரத்தடி பிள்ளையாருக்கு உங்களால் முடிந்ததோப்பு காரணத்தை போட்டு விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். சிவப்பு நிற செம்பருத்தி பூ கிடைத்தால் விநாயகருக்கு வைத்து விட்டு, வரங்களை கேட்டால் பின்னர் விநாயகர் மனம் மகிழ்ந்து நீங்கள் கேட்கும் வரங்களை எல்லாம் கொடுத்து விடுவார் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. அரச மரத்திலிருந்து யாரும் குச்சிகளை உடைத்து எடுக்கக் கூடாது என்று சொல்லுவார்கள்.

அரச மரத்திலேயே குச்சிகள் காய்ந்து கீழே விழும். அந்த குச்சிகளை சேகரித்து நம்முடைய வீட்டில் சிறிய அளவில் யாகம் நடத்தினால், நம்முடைய வீட்டில் பெரிய அளவில் யோகம் கிட்டும் என்று சொல்லுவார்கள். வாய்ப்பு கிடைத்தால் இந்த யாகத்தை உங்களுடைய வீட்டிலும் நடத்திக் கொள்ளுங்கள். சிறிய அளவில் ஹோமம் செய்து இந்த குச்சியை போடுவதை தான் யாகம் என்று சொல்கின்றோம்.

- Advertisement -

ஆனால் அதற்கும் வசதி வாய்ப்புகள் தேவை என்று நினைத்தால், ஒரே ஒரு அரசன் குச்சியை எடுத்து வாருங்கள். மரத்திலிருந்து தானாக கீழே விழுந்த அரசமர குச்சியை எடுத்து, மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு காய வைத்து, பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்து விடுங்கள்.

தினமும் விளக்கு ஏற்றி அந்த அரசன் குச்சியை வணங்கி வந்தாலும், உங்களுடைய வாழ்வு வளம் பெறும். வீட்டில் செல்வ செழிப்பு கொழிக்கும். தினமும் அரச மர விநாயகரை வழிபாடு செய்ய முடியாதவர்கள் கூட, அரச மரத்தடி விநாயகர் இருக்கக்கூடிய, அரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட குச்சியை வழிபாடு செய்யலாம். அதற்கும் மகத்துவம் உண்டு.

இதையும் படிக்கலாமே: இந்த எண்கள் உள்ள நோட்டுகள் கிடைத்தால் அதை தவற விடாமல் உடனே இந்த பையில் வைத்து விடுங்கள். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு ரூபாயும் கோடி ரூபாயாக பெருகும். கட்டு கட்டாக பணம் சேர எளிமையான தாந்திரீக பரிகாரம்.

வாழ்வில் தடைகள் விலக வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -