அரசு வேலை அமைய வழிபாடு

Pray suriyan
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரும் நல்ல வேலைக்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். ஒரு சிலர் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். இன்னும் சிலரோ அரசாங்க வேலை தான் வேண்டும் என்று முழுமனதுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இந்த அரசாங்க வேலை என்பது அவர்களின் பல நாள் கனவாகவே இருக்கும்.

அப்படி அரசாங்க வேலை தான் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் வேலைக்கான முயற்சிகளோடு சேர்த்து இந்த ஒரு எளிய வழிபாட்டையும் செய்து வரும் போது வேலைக்கான வாய்ப்பு நிச்சயம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அரசு வேலை அமைய வழிபாடு

அரசாங்க உத்தியோகம் வேலை வாய்ப்புக்கான அனைத்து காரியங்களையும் நமக்கு சுத்தமாக்கி தருபவர் சூரிய பகவான். ஆகையால் இந்த வழிபாட்டை நாம் சூரிய பகவானை நினைத்து அவருக்கு தான் செய்யப் போகிறோம். சூரிய பகவானுக்கு உகந்த நாளெனில் அது ஞாயிற்றுக்கிழமை தான். ஆகவே ஞாயிற்றுக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு சூரிய ஹேரையில் இந்த வழிபாடு செய்து விடுங்கள்.

இந்த வழிபாடு செய்ய காலை சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து விடுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய தட்டில் கற்பூரம், ஊதுபத்தி எடுத்து கொள்ளுங்கள். சூரிய பகவானுக்கு நெய்வேத்தியமாக கற்கண்டு அல்லது வெல்லம் இவற்றை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டு மாடிக்கு செல்லுங்கள் அல்லது வீட்டிற்கு வெளியில் வந்து நில்லுங்கள். சூரிய ஒளி உங்கள் மீது படும்படியான இடத்தில் நின்று கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து தட்டில் இருக்கும் கற்பூரத்தை ஏற்றி ஊதுபத்தியும் ஏற்றி சாமிக்கு தீபாராதனை காட்டுவது போல காட்டிய பிறகு சூரிய பகவானை பார்த்து உங்களுடைய இரு கரங்களையும் மேலே கூப்பி ஓம் சூரிய தேவாய நமஹ என்ற இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி உங்களை நீங்களே ஒரு முறை சுற்றி வந்து சூரிய பகவானை பார்த்து விழுந்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அந்த தீபாராதனை தட்டு நெய்வேத்திய பிரசாதம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டு பூஜை அறைக்கு வந்து விடுங்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இதே போல் சூரிய பகவானை மனதில் நினைத்துக் கொண்டு ஓம் சூரிய தேவாய நமக இந்த மந்திரத்தை 308 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு பூஜை முடித்துக் கொண்டு நெய்வேத்திய பிரசாதத்தை சாப்பிடுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை யாருக்கு வேலை வேண்டுமோ அவர்கள் தான் செய்ய வேண்டும் அப்போது தான் 100% பலன் கிடைக்கும். அவர்களுக்காக மற்றவர் செய்யும் பொழுது பலன் சற்று குறைவாகத் தான் கிடைக்கும். அதேபோல் ஞாயிற்றுக்கிழமையில் இந்த வழிபாடு செய்வதால் அசைவம் தவிர்க்க வேண்டுமா என்ற அச்சப்படத் தேவையில்லை வழிபாடு முடியும் வரை சுத்தமாக இருந்தால் போதும் அதன் பிறகு விருப்பமான உணவை சாப்பிடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி தீய சக்தி விலக

பெண்களாக இருந்தால் மாதவிலக்கு சமயத்தில் இதை செய்ய வேண்டாம். இதைத்தவிர இந்த வழிபாட்டை செய்து பெரிய விதிமுறைகள் எதுவும் இல்லை. வேலைவாய்ப்புக்கான இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் நம்பிக்கையுடன் செய்து நல்ல வேலை வாய்ப்பை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -