தீராத நோய் தீர பசு மாட்டிற்கு உங்கள் கையால் இந்த ஒரு பொருளை கொடுங்க.

cow
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள். இதற்கு உண்டான அர்த்தத்தை தினம் தினம் மாத்திரை சாப்பிடுபவர்கள் உணருவாங்க. தினம் தினம் உடம்பு வலியால் கஷ்டப்படுபவர்கள் இதற்கு உண்டான அர்த்தத்தை நன்றாக புரிந்து கொள்வார்கள். தீராத நோய், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு பெறவும், மருந்து மாத்திரை சாப்பிடக் கூடிய பழக்க வழக்கங்களை படிப்படியாக குறைக்கவும், என்ன செய்வது. ஆன்மீகம் சார்ந்த இரண்டு எளிமையான பரிகாரம் இந்த பதிவில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை பின்பற்றி பலன் பெறலாம்.

ஆரோக்கியம் தரும் பசு பரிகாரம்:
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலனை கொடுக்கும். ஞாயிறு அன்று காலை 6:00 மணி அளவில் குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். சூரிய பகவானிடம் உங்களுக்கு இருக்கும் நோய் நொடி பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். உதயமாக கூடிய சூரிய பகவானின் முன்பு உங்கள் வேண்டுதலை வைத்தால், அந்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும்.

- Advertisement -

அதன் பிறகு கோதுமை மாவில் உங்கள் வீட்டிலேயே சப்பாத்தி செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் ஐந்து நபர் இருக்கிறார்கள் என்றால், ஐந்து சப்பாத்திகள் தயார் செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் ஒருத்தர் இந்த ஐந்து சப்பாத்தியை கொண்டு போய் பசு மாட்டிற்கு கொடுக்கலாம். முடிந்தால் நீங்கள் கோவிலுக்கு செல்கிறீர்கள். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினர் கையாலும் ஒவ்வொரு சப்பாத்தி கொடுத்தாலும் இன்னும் சிறப்பான பலனை நிச்சயமாக கொடுக்கும்.

பரிகாரத்திற்காக ஒருவருக்கு ஒரு சப்பாத்தி என்ற கணக்கு. அதற்கு மேலும் நீங்கள் சப்பாத்தியை சமைத்து பசு மாட்டிற்கு கொடுப்பதில் எந்த தவறும் கிடையாது. ஆரோக்கிய செல்வமும் லட்சுமி கடாட்சமும் உங்களுடைய குடும்பத்திற்கு நிறைவாக கிடைக்கும். பிறகு உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கத்தில், கிழக்கு திசையில் உள்ள சுவற்றில் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சீனரி மாட்டி வைக்கலாம்.

- Advertisement -

பச்சை பசேல் என செழிப்பாக மரம் செடி கொடிகள் மலைகள் எல்லாம் இருக்கும் அல்லவா. அப்படி ஒரு புகைப்படத்தை மாட்டி வைக்கலாம். கிழக்கு பக்கம் இருக்கும் சுவற்றில் இதை மாட்டனும். அந்த படம் மேற்கு பக்கம் பார்த்தவாறு இருக்கும்படி மாட்டிக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் வீட்டுக் கிழக்கு திசையில், அழகாக சின்ன சின்ன தொட்டிகளில், பச்சை பசேல் என வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய செடிகளை வைக்கலாம்.

அது முடியாது என்றால் சின்ன ஃபிளவர் வாஷில் அழகான பூக்களை வைக்கலாம். அந்தப் பூக்களை தண்ணீரில் போட்டு வைத்தால் மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும். பிறகு அந்த பூக்களை மாட்டி வைக்கலாம். அதாவது உருலி என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த உருளியை இந்த கிழக்கு திசையில் வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. அதில் பூக்களோடு சேர்த்து இரண்டு பச்சையான இலைகளையும் போட்டு வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை துர்காஷ்டமி அன்று துர்க்கையை இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் போதும் எதிரிகள் உங்கள் பெயரை கேட்டாலே அலறி அடித்து ஓடி விடுவார்கள்.

துளசி இலை அருகம்புல் அரச இலை மருதாணி இலை இப்படி எந்த பச்சை நிற இலையை அதில் போட்டு வைத்தாலும் தவறு கிடையாது. மேலே சொன்ன இந்த எளிமையான பரிகாரங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நோய்நொடி பிரச்சனையை படிப்படியாக குறைக்கும். மருந்து மாத்திரைக்கான செலவு குறையும். இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -