தைப்பூச நாளில் ராஜ யோகத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்

murugan5
- Advertisement -

இன்று தை மாதத்தின் 11 வது நாள். பௌர்ணமி திதி, இதோடு சேர்ந்து பூசம் நட்சத்திரம் இருக்கிறது. முருகனுக்கு உரிய தைப்பூச நாள், இந்த வருடம் வியாழக்கிழமை அன்று வந்திருக்கிறது. இந்த வருட தைப்பூச நாளில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமும் பண வரவும் காத்துக் கொண்டிருக்கிறது.

தைப்பூச திருநாளில் யோகம் பெறப்போகும் அந்த மூன்று ராசிகள் யார் யார், இந்த மூன்று ராசிக்காரர்களும் வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களில் இருந்து வெளிப்பட செய்ய வேண்டிய சுலபமான பரிகாரங்கள் என்னென்ன ஜோதிடம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இன்று நீங்கள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு கட்டாயம் செல்லவும். இன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது உங்களுக்கு கோடி பலனை தேடி தரும். நீங்கள் செவ்வாய் பகவானுக்கு உரிய துவரம் பருப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சிவப்பு துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

முடிச்சாக கட்டிய துவரம் பருப்பை உங்க வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இன்று இரவு தூங்கும் போது அந்த துவரம்பருப்பு முடிச்சை உங்கள் தலையணைக்க அடியில் வைத்து தூங்கவும். நாளை காலை எழுந்து இந்த துவரம் பருப்பை உங்கள் தலையை சுற்றி காக்கை குருவிகளுக்கு போடலாம்.

- Advertisement -

அல்லது பசு மாட்டிற்கு இந்த துவரம் பருப்பை கொடுக்கலாம். இப்படி செய்யும் போது உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பரிகாரம் செய்வதோடு சேர்த்து இனி உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் சரியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தோடு இருக்காதீங்க நிச்சயம் நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இனி கஷ்டங்கள் தீரப் போகும் நேரம் வந்துவிட்டது. இன்று வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு பரிகாரம் செய்ய புதன் பகவானுக்கு உரிய பச்சைப்பயிறு தேவை. பச்சை நிறத் துணியில் ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் இந்த பச்சை பயிறு முடிச்சை வைத்து விடுங்கள். இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த முடிச்சை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கவும். மறுநாள் காலை எழுந்து பச்சை பயிறு முடிச்சை உங்கள் தலையை மூன்று முறை சுற்றி காக்கை குருவிகளுக்கு தானம் செய்யலாம் அல்லது பசு மாட்டிற்கு கொடுக்கலாம். உங்கள் கஷ்டங்கள் குறைய இந்த பரிகாரம் கைகொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கட்டாயம் இன்று முருகன் கோவிலுக்கு சென்று முருகரை வழிபாடு செய்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் காலத்தால் தீர்க்க முடியாத கஷ்டத்தை கூட கந்தன் தீர்த்து வைப்பான். சுக்கிர பகவானுக்கு உரிய மொச்சை பயிறு வைத்து தான் இன்று உங்களுக்கு பரிகாரம். ஒரு வெள்ளை துணியில், ஒரு கைப்பிடி அளவு மொச்சை பயிறு வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இன்று இரவு தூங்கும் போது தலையணுக்கு அடியில் இந்த மொடிச்சை வைத்து தூங்கவும். மறுநாள் காலை எழுந்து இந்த முடிச்சை உங்கள் தலையை சுற்றி உள்ளே இருக்கும் மொச்சை பயிறை காக்கை குருவிகளுக்கு தானம் கொடுக்கணும். அப்படி இல்லை என்றால் பசு மாட்டிற்கு தானம் செய்யலாம். இந்த பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பத்தை தீர்த்து வைக்கும்.

மேலே சொன்ன ஜோதிடம் சார்ந்த பரிகாரம் இந்த 3 ராசிகளுக்கும் பொதுப்படையாக சொல்லப்பட்டவை. ஜோதிடத்தின் அடிப்படையில் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட இந்த எளிமையான பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். இன்று 25-01-2024 எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த முடிச்சை நீங்கள் கட்டி பூஜை அறையில் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: தீர்க்க சுமங்கலி வரம் பெற தை வெள்ளி வழிபாடு

இரவு தூங்க செல்லும் போது அதை எடுத்து தலையணையில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை அதாவது வெள்ளிக்கிழமை காலை எழுந்த உடன் இந்த முடிச்சை உங்கள் தலையை சுற்றி வைத்து விடுங்கள். பிறகு குளித்து முடித்துவிட்டு இதை கொண்டு போய் தானம் செய்யுங்கள். முருகப்பெருமானின் ஆசீர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் கஷ்டங்கள் தீரும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -