மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

astrology symbol amman
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் மாற்றங்களும் 12 ராசிகளுக்கு சாதகம் அல்லது பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அந்த வகையில் நவம்பர் மாத இறுதியில் மாளவ்ய ராஜ யோகம் ஏற்படப் போகிறது. இதன் மூலம் பலன் அடையப் போகும் அதிர்ஷ்டசாலி ராசிகள் யார்? யார்? என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் மாளவிய யோகம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த மாளவ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் உள்ள கிரகங்களின் ஒட்டு மொத்த கலவையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 1,4,7,10 போன்ற வீட்டில் சுக்கிரன் நுழையும் போது இந்த யோகம் நடை பெறுகிறது. அந்த வகையில் நவம்பர் 30ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் நுழைவதால் சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பை பெறப் போகிறது.

- Advertisement -

இந்த மாற்றத்தால் அதிர்ஷ்டப் பெறக் கூடிய ராசிக்காரர்களுக்கு படைப்பாற்றல் திறன், முக வசீகரம், ஆடம்பரம், பொன் பொருள் சேர்க்கை போன்ற நற்பலன்களை ஏற்படுத்தும். அது மட்டும் இன்றி அவர்களுடைய படைப்பாற்றல், கலைத்திறன் போன்றவை அதிகரித்து அவர்களை மிகவும் கவர்ச்சியானவர்களாகவும் மாற்றும் என்றும் நம்பப்படுகிறது. இதை மகா பஞ்ச புருஷ யோகங்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார்கள்.

இந்த யோகமானது ஒரு நபரின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தில் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு பின்வரும் மாளவ்ய ராஜ யோகத்தால் பலன் பெறக் கூடிய அந்த அதிஷ்டசாலி ராசிகள் யார்? யார்? என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கன்னி ராசி

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீட்டு கதவை தட்டப் போகிறது என்றே சொல்லலாம். மிகப்பெரிய அளவில் ஆதாயங்கள் கிடைக்கக் கூடிய காலம் இது. இதனால் திடீர் பண வரவுகள் உண்டாகும். அது மட்டும் இன்றி உங்கள் பேச்சே உங்களுடைய பெரிய பலமாக மாறக் கூடிய காலம் இது வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்புகளும் வரும். வியாபாரம் தொழிலில் இது வரை சிக்கலை சந்தித்தவர்களுக்கு அதில் நல்ல லாபத்தை பெறக் கூடிய அற்புதமான காலமாக இது மாறப் போகிறது.

துலாம்

மாளவ்ய ராஜ யோகத்தால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை திறன் பல மடங்கு மேம்பட போகிறது. இவர்களின் பணி திறன் அனைவரையும் கவர்ந்து நல்ல சாதகமான சூழ்நிலையில் தரப் போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், அற்புதமான பல வாய்ப்புகள் காத்திருக்கிறது. திருமணம், குடும்பம், காதல் போன்றவற்றில் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் தீவிரமாக இருப்பார்கள். இதில் கொஞ்சம் கவனமாக இருப்பது அவசியம். அது மட்டும் இன்றி ஆராய்ச்சி போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு அற்புதமான காலம் என்றே சொல்லலாம். மொத்தத்தில் நல்ல வரவை தரக் கூடிய யோகம் இந்த ராசிக்காரர்களை நெருங்கி விட்டது.

- Advertisement -

மகரம்

இந்த ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகத்தால் தொழிலில் பெரிய அளவு வெற்றியைத் பெறுவார்கள். இதனால் பல மடங்கு லாபத்தை சந்திக்கக் கூடிய அற்புதமான நேரம். இவர்களின் ஆக்கப்பூர்வமான புதிய சிந்தனைகளை கொண்டு புதிய தொழில் வருமானத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். வேலை இல்லாமல் இதுவரை துன்பப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் ஆதாயம் உண்டு. திடீர் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் குழந்தைகளால் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கும் பல நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே: திருமண தடை நீக்கும் வாழைப்பூ கலசம்

இந்தப் பதிவில் உள்ள கருத்துகள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரத்தின் பொதுவான அடிப்படையில் கணிக்கப்பட்ட விஷயங்கள் தான். இதில் அவரவர் கிரக சூழ்நிலை மாறுவதை பொறுத்து ஒரு சில மாறுதல்களுக்கும் வாய்ப்பு உண்டு. இதை ஒரு தகவலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம் என்னும் இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -