பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து வகையான நோய்களையும் தீர்க்க உதவும் அத்திக்காயை வைத்து இப்படி ஒரு முறை பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

athikai poriyal
- Advertisement -

பொதுவாக உலர்ந்த அத்திப் பழங்களை ஊறவைத்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பல பேருக்கு உண்டு. அவ்வாறு சாப்பிடுவதால் உடலில் இருக்கும் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் என்றும், மலச்சிக்கல் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. இதை நாம் பிஞ்சாகவும், காயாகவும், பழமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அனைத்திலும் ஒரே விதமான சத்துக்கள் தான் இருக்கும். காயில் அதிக அளவு துவர்ப்பு சத்து இருக்கும். பழத்தின் நடுப்பகுதியில் சிறு சிறு பூச்சிகளும், புழுக்களும் இருக்கும் என்பதால் அத்திக்காயின் பிஞ்சை பயன்படுத்தி தான் சமைக்க வேண்டும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் அத்திக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உடல் பலவீனம், நரம்பு தளர்ச்சி போன்றவற்றை நீக்க அத்திக்காய் உதவுகிறது. மேலும் இரத்தபேதி, இரத்த மூலம் உள்ளவர்களுக்கு இரத்த சோகை ஏற்படும். பெண்களுக்கும் இரத்த சோகை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இந்த அத்திக்காயை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை முற்றிலும் நீங்கிவிடும். மேலும் இதில் துவர்ப்பு சுவை அதிகம் இருப்பதாலும், குளிர்ச்சி தன்மை மிக்கதாகவும் இருப்பதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் தொந்தரவுகள் அனைத்திற்கும் சிறந்த மருந்தாக அத்திக்காய் விளங்குகிறது. மலச்சிக்கலை நீக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

- Advertisement -

செய்முறை 

ஒரு கிலோ அத்தி காயை பிஞ்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை நன்றாக சீவி வெதுவெதுவென்று இருக்கும் நீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடுகு சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு வதங்க ஆரம்பித்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் 5 பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். மிளகாய் நன்றாக வதங்கிய பிறகு அதில் நீள வாக்கில் நறுக்கிய 3 பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 5 தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் அத்திக்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளும், தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு கறி மசாலா தூள் 100 கிராம் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றிய பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி இறக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நல்லா கமகமன்னு ஊரே மணக்குற அளவுக்கு தக்காளி ரசத்தை ஒரு முறை இப்படி வச்சு பாருங்க. ரசமெல்லாம் ஒரு குழம்பானு கேக்குறவங்க கூட இனி ரசம் மட்டும் இருந்தா போதும்னு சொல்லி குண்டா சோறு சாப்பிடுவாங்க.

பல அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அத்திக்காயை வாரத்தில் ஒரு முறையாவது சமையலில் சேர்த்துக் கொண்டு நலமுடன் வாழலாம்.

- Advertisement -