பணக்கஷ்டம் தீர அதிர்ஷ்டம் வர செய்ய வேண்டிய பரிகாரம்

astro
- Advertisement -

இன்று ஜோதிடத்தின் அடிப்படையில் ஒரு அருமையான அரிய தகவலை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். யார் கை ரொம்ப ரொம்ப ராசியானது. இவர்கள் கையில் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால் அது ஒரு லட்சமாக மாறுமாம். ஒரு புது தொழில் தொடங்கப் போறீங்க. கல்லாப்பெட்டியில் ஒரு ரூபாய் போடணும். அதாவது ராசியான கையால் முதல்ல போனி செய்யணும். அப்படி சொல்லுவாங்க.

அந்த வரிசையில் இவர்கள் கையில் இருந்து அந்த ஒரு ரூபாயை வாங்கி, கெல்லா பெட்டியில் போட்டால் உங்கள் தொழில் மேலும் மேலும் ராசி ஆக மாறும்‌. ஏதோ ஒரு பணக்கஷ்டம் உங்களுக்கு இருக்குது. பணம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கீங்க. அதை சரி செய்ய இன்று வெளியே போறீங்க.

- Advertisement -

இவர்கள் கையில் இருந்து ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு சென்றால், உங்கள் பணகஷ்டம் அன்று தீர்ந்துவிடும். பண சிக்கலை சரி செய்யக்கூடிய அதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு ரூபாயை யார் கையில் இருந்து வாங்கணும். அதுதான் இன்று நான் தெரிந்து கொள்ளக்கூடிய ஜோதிடம் சார்ந்த விஷயம்.

பணக்கஷ்டம் தீர ஜோதிட பரிகாரம்

இவர்கள் கையில் இருந்து ஒரு ரூபாயை நீங்கள் வாங்கிவிட்டால் உங்கள் பண பிரச்சனை நிச்சயம் தீரும். ரிஷப ராசி, ரிஷப லக்னம் கொண்டவர்கள், துலாம் ராசி, துலாம் லக்னம் கொண்டவர்கள். இவர்களிடம் உங்கள் பிரச்சினையை சொல்லுங்க. உங்கள் கையால் ஒரு ரூபாய் கொடுங்க என்று கேட்கலாம். உங்கள் சொந்தக்காரங்க நண்பர்கள் யாராவது நிச்சயம் இந்த ராசி லக்னத்தில் இருப்பார்கள். இவர்கள் கையால் தினமும் ஒரு ரூபாய் கிடைத்தால் கூட அது அதிர்ஷ்டம் தான்.

- Advertisement -

உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனை எல்லாம் தீரும். தேவைக்கு ஏற்ப பணம் வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் பெருகும். சரிங்க அப்படி இந்த ராசி இந்த நட்சத்திரத்தைக் கொண்டவர்கள், அவர்களது கையால் நமக்கு காசு கொடுத்து விட்டால், அவர்களுடைய ஐஸ்வர்யம் நமக்கு வந்துவிடுமா. நமக்கு காசு கொடுப்பவர்கள் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடுவார்களா.

அவர்கள் ஒரு ரூபாயை தினமும் நமக்கு கொடுக்கலாமா என்று கேட்டால், நிச்சயம் கொடுக்கலாம். அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற மனதோடு அவர்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் அவர்களுடைய வாழ்க்கையை நிச்சயம் கஷ்டப்படுத்தாது. ரிஷப ராசி, ரிஷப லக்னம். துலாம் ராசி, துலாம் லக்னக்காரர்களிடமிருந்து நம் கைக்கு வரக்கூடிய அந்த காசு அதிர்ஷ்ட காசு.

- Advertisement -

நீங்கள் வேண்டுமென்றால் இந்த சின்ன சூட்சமத்தை ஒரு முறை முயற்சி செய்துதான் பாருங்களேன். உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தால் அந்த நபரை விடாதீங்க. பிடிச்சு வச்சுக்கோங்க. தினம் தினம் ஒரு ரூபாயை கொடுக்க சொல்லுங்க. நீங்களும் நல்லா இருக்கீங்க. உங்களுக்கு ஒரு ரூபாய் கொடுப்பவரும் நிச்சயம் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

பின்குறிப்பு: இந்த ரிஷப ராசி, ரிஷப லக்னம், துலாம் ராசி துலாம் லக்னக்காரர்களுக்கு பணத்தட்டுப்பாடு வராது. உங்க வீட்டில் யாராவது இந்த ராசி லக்னம் கொண்டவர்கள் இருந்தால் இவர்களுடைய பெயரில் சொந்த தொழில் ஆரம்பிக்கலாம். ஓஹோ என தொழில் லாபத்தோடு செல்லும்.

இதையும் படிக்கலாமே: வாழ்வில் விஸ்வரூப வெற்றி பெற பரிகாரம்

இவர்கள் நம் கூட இருந்தால் இவர்கள் நம் கையில் ஒரு ரூபாயை கொடுத்தால் நமக்கு வருமானம் மட்டும் பெருகாது, நம்முடைய வீண் விரைய செலவை கூட குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாத்துக்கோங்க, இது அரிய தகவல். இவர்களை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.

- Advertisement -