இந்த 5 உயிரோட்டம் நிறைந்த பொருட்கள் எப்போதும் உங்கள் வீட்டில் ஒன்றாக இருந்தால், உங்கள் பிரம்மாண்ட வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. யோகம் தானாக வந்து வீட்டு கதவை தட்டும்.

komatha
- Advertisement -

அதிர்ஷ்டக் காற்று அவன் வீட்டு கதவை தட்டிவிட்டது. அதனால் தான், அவன் திடீரென்று பணக்காரனாகி விட்டான் என்று சில பேரை பார்த்து நாம் பேசுவோம் அல்லவா. அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் நமக்கும் அடிக்க வேண்டும். அப்படிப்பட்ட யோகக்காரர்களாக நாமும் மாற வேண்டும் என்றால் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பார்க்கலாம். ஆண்டவன் நினைத்தால் ஒரு நிமிடத்தில் நாம் பணக்காரராக மாறிவிடலாம். அதிர்ஷ்டமும் யோகமும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நம் வீட்டு கதவை தட்டும். ஆனால், இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்றால் நம்முடைய உழைப்பையும் சிறிய மூலதனமாக போட வேண்டும். சின்ன சின்ன முயற்சிகள் தான் பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கும்.

உங்களுடைய வேலையை தவறாமல் நீங்கள் செய்து வாருங்கள். முழு முயற்சியோடு தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். கூடவே சேர்த்து இந்த பரிகாரம் செய்யும் போது, முயற்சிகளில் இருக்கும் தடைகள் விலகி, பிரம்மாண்ட வெற்றியை கூடிய சீக்கிரத்தில் அடைய நல்ல காலம் பிறக்கும்.

- Advertisement -

பிரம்மாண்ட வளர்ச்சியை தரும் ஐந்து பொருட்கள்:
நம்முடைய வீட்டில் எப்போதுமே ஒரு நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும். அந்த நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கக்கூடிய ஐந்து பொருட்களை தான் இப்போது நாம் ஒன்றாக நம் வீட்டில் வைக்கப் போகின்றோம். ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். சில்வர் பௌலாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் குடிக்கின்ற நல்ல தண்ணீரை ஊற்றி காய்ச்சாத பால் 1 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், நெய் 1 ஸ்பூன், சிறிதளவு பசு சானம் அல்லது வரட்டி கிடைத்தாலும், உடைத்துப் போட்டு கலந்து, வரவேற்புறையிலோ அல்லது வீட்டில் வேறு எங்காவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

இந்த தண்ணீரை 24 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இன்று காலை 7 மணிக்கு இந்த தண்ணீரை தயார் செய்து வைத்தால், மறுநாள் காலை 7 மணிக்கு இந்த தண்ணீரை, மண்பாங்கான இடத்தில் அல்லது செடி கொடிகளுக்கு மேல் ஊற்றிவிட்டு மீண்டும் புதிய தண்ணீரை வைத்து, மீண்டும் புதியதாக ஐந்து பொருட்களையும் போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த ஐந்து உயிரோட்டம் நிறைந்த பொருட்களும் ஒன்றாக தண்ணீரில் இருக்கும் போது உங்களுடைய வீட்டில் இருக்கும் துரதிஷ்டம் தானாக வெளியே சென்று விடும். வீட்டிற்குள் அதிர்ஷ்ட காற்று தானாக வீசத் தொடங்கிவிடும். நடக்காத நிறைய நல்ல காரியங்கள் ஒரு சில நாட்களில் வீட்டில் நடக்க தொடங்கி விடும்.

ஆனால் ஒரு விஷயம். இதை மட்டும் செய்துவிட்டு உழைக்கவில்லை என்றால் நிச்சயமாக நல்லது நடப்பதற்கு வாய்ப்பு கிடையாது. உழைப்போடு சேர்த்த, பரிகாரம் தான் பலனை கொடுக்கும். இதனுடன் இன்னொரு விஷயத்தையும் செய்யுங்கள். கோமாதா சிலை உங்கள் வீட்டில் இல்லை என்றால் கோமாதாவை கன்றோடு சேர்த்து வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: புதன் அருள் இருந்தால் புத்தி மட்டுமல்ல சொத்தும் சேருமாம் தெரியுமா? புதன்கிழமைகளில் விரதம் இருந்து எளிதாக இவரை வழிபட்டால் அள்ள அள்ள குறையாத செல்வங்கள் பெருகும்!

சிறிய அளவில் பீங்கானில் கூட இப்போது இந்த பொம்மை விற்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் கோமாதா சிலை கட்டாயம் இருக்க வேண்டும். இது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு பொருள். அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து உங்களுக்கு தெரிந்தவர், சொந்தக்காரர், நண்பர்கள், இவர்கள் வீட்டு விசேஷத்திற்கு இந்த கோமாதா பொம்மையை பரிசாக வாங்கி கொடுத்தால், பரிசு கொடுப்பவர்க்கும் நல்லது நடக்கும். பரிசாக பெறுபவருக்கும் நல்லது நடக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் இதையும் செய்து பாருங்கள். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -