உங்கள் அம்மா பயன்படுத்திய இந்த பொருளை மட்டும் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள். இந்தப் பொருள் இருந்தால் அளவில்லா செல்வமும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக வீட்டில் தங்கும்.

amma
- Advertisement -

நம் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்றால் அதற்கு பெற்ற தாயின் ஆசிர்வாதம் மிக மிக முக்கியம்‌. பெற்ற தாயை எந்த சூழ்நிலையிலும் மனம் நோகும்படி பேசக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் அவர்களை தனியாக ஒதுக்கி வைக்கக் கூடாது. இது மிகப்பெரிய தவறு. மிகப் பெரிய பாவம். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரியும். தாய் தான் நமக்கு கண்கண்ட தெய்வமென்று! ஆனால் சூழ்நிலை காரணமாக ஏதாவது ஒரு தருணத்தில் பிரச்சினைகள் வரும்போது, என்றாவது ஒரு நாள் நாம் கட்டாயமாக நம்முடைய அம்மாவின் மனம் நோகும்படி பேசியிருப்போம். இல்லை என்று யாராலும் மறுத்து விட முடியாது.

amma1

உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் இடையே எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்துவிட்டு ‘குழந்தைகள் அம்மாவிடம் போய் பேசுவதில் தவறு கிடையாது’. அதே சமயம் நீங்கள் உங்க அம்மாவை எதிர்த்து அனாவசியமான வார்த்தைகளை பேசி திட்டி இருந்தாலும் மனதார அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இது முதல் விஷயம். இதை உங்கள் அம்மா உயிருடன் இருக்கும் போதே செய்துவிடுங்கள். பின்பு அவர்கள் மறைந்த பின்பு வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இருக்காது.

- Advertisement -

சரி, அம்மாவின் காலத்திற்கு பிறகு அவர்களுடைய ஞாபகமாக நம்முடைய வீட்டில் அவர்கள் பயன்படுத்திய எந்த பொருளை நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம். அம்மா பயன்படுத்திய மெட்டி, கம்மல், மூக்குத்தி, வளையல், இப்படிப்பட்ட பொருட்களை உங்கள் அம்மாவின் நினைவாக உங்களுடைய வீட்டில் நீங்கள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, உங்கள் அம்மா பயன்படுத்திய மங்களகரமான இந்த பொருட்களை எடுத்து அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்காதீர்கள்.

metti

தங்கம் வெள்ளியாக இருந்தால் நிச்சயமாக இலவசமாக தானம் கொடுக்க மாட்டோம். கடைக்கு கொண்டு போய் அந்த பொருளை கொடுத்துவிட்டு வேறு புதிய பொருளை மாற்றிக் கொள்வோம். ஆனால், அம்மா பயன்படுத்திய மெட்டி மூக்குத்தி இந்த இரண்டு பொருளை மட்டும் மாற்றாமல்,  பத்திரமாக உங்கள் வீட்டில் வைத்துக்கொள்வது, வீட்டிற்கு நன்மையையும் ஐஸ்வர்ய கடாட்சமும் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது இரண்டு பொருளின் மூலம் அதாவது அம்மா பயன்படுத்திய மெட்டி, மூக்குத்தியின் மூலம், உங்கள் அம்மா இந்த உலகத்தை விட்டு விடை பெற்ற பின்பும் அவர்களுடைய நிறைவான ஆசிர்வாதம் உங்கள் வீட்டிற்கு கிடைக்கும்.

- Advertisement -

ஏன் மற்ற பொருட்களை எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாதா? அவர்கள் பயன்படுத்திய ஆடை உள்ளது. அவர்கள் பயன்படுத்திய மற்ற பொருட்கள் எல்லாம் இருக்குமே என்று சந்தேகம் நிச்சயம் எல்லோருக்கும் எழும்.

mookuthi

அவர்கள் பயன்படுத்திய உன்னதமான மதிப்புமிக்க தங்கத்தால் செய்யப்பட்ட, வெள்ளியால் செய்யப்பட்ட இந்த இரண்டு பொருட்களுக்கு ஆகர்ஷண சக்தி அதிகமாக இருந்திருக்கும். (மெட்டி, மூக்குத்தி) ஆகவே இந்த இரண்டு பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் நிச்சயமாக உங்கள் குடும்பத்திற்கு நல்லது மட்டுமே நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -